Tuesday 26 February 2013

குழந்தைகளைப் பாதுகாப்போம்! அடுத்துக் கெடுப்பவர்களிடமிருந்து...




 ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் நாளை குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவதற்கு எதிரான நாளாக அறிவித்துள்ளன உலகநாடுகள். இந்த ஆண்டும் நவம்பர் 19ஆம் நாளை அப்படியே அறிவித்துள்ளன உலக நாடுகள். இப்படி ஆண்டில் ஒரு நாளை அறிவிப்பதால் என்ன பயன்?

இந்தக் கேள்விக்கு இன்றளவும் தெளிவான பதில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு விதத்தில் இந்த நாள் பயன்படுகின்றது. அது, குழந்தைகளுக்கெதிராக நடக்கும் கொடுமைகளைப் பகிரங்கப்படுத்துகின்றது. இப்படிக் குழந்தைகளுக்கெதிராக நடக்கும் கொடுமைகளைப் பகிரங்கப்படுத்து வதால் மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுகின்றது அவ்வளவு தான்.

ஆனால் 2003 நவம்பர் 19ஆம் நாள் கிடைத்த தகவல்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதாய் அமைந்தன. நமது குழந்தைகள் சிறுவயதிலேயே பாலியல் வன்முறைகளுக்கு ஆட்படுத்தப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் குழந்தை கற்பழிக்கப் படுகின்றது. 

பத்து குழந்தைகளில் ஒன்று பாலியல் வன்முறைக்கு பலியாகின்றது. இத்தனையும் இந்தியாவிலேயே நடைபெறுகின்றது. பாலியல் வன்முறை என்பது குழந்தைகளின் மறைவிடங்களை சில காம வெறியர்கள் தங்கள் வெறிக்குப் பயன்படுத்துவது. இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளுள் பாதிபேர் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். 
 

உலகிலுள்ள இதர நாடுகளைவிட இந்தியா இந்த விஷயத்தில் முன்னே நிற்கின்றது. இந்த தகவலை லூயிஸ்து இன்கல்பிரித் என்பவர் தருகின்றார். இவர் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான குழந்தைகளின் சிகிச்சை மையம்என்பதை நிறுவியவர். (Centre for the Prevention and Treatment of Child Sexual Abuse - CSA).


நாம் மேலே சொன்ன புள்ளிவிவரங்கள் அல்லது கணக்குகள் மிகவும் குறைவானவைதான். உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகம். காரணம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் தங்களுக்கேற்பட்ட அவமானத்தை வெளியே சொல்வதில்லை. அப்படியே குழந்தைகள் சொன்னாலும் பெற்றோர்கள் குடும்பத்தின் தன்மானங்கருதி அதனை வெளியே சொல்வதில்லை. நிச்சயமாக அவர்கள் அவற்றை வழக்குகளாக மாற்றுவதில்லை. 

குழந்தைகளைக் கெடுப்பவர்கள் யார்?


இந்த பிஞ்சுகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குபவர்கள், பல நேரங்களில் அவர்களின் உறவினர்கள். இந்த உறவினர்களோடு குழந்தைகள் விளையாடும்போது அவர்களை யாரும் சந்தேகப்படமாட்டார்கள். அப்படியே



குழந்தைகள் வெளியே சொன்னாலும் பெற்றோர்கள், தெரியாமல் கைபட்டிருக்கும். அதை ஏன் பெரிதுபடுத்துகின்றாய்? என்று உதறித்தள்ளிவிடுவார்கள். அதேபோல் சில நேரங்களில் அண்டை அயலார்கள் - கண்ணியமானவர்கள் என மதிக்கப்படும் ஆசிரியர்கள் ஆகியோர்.

நமது இந்தியாவில் ஒரு நிறுவனம். அதன் பெயர் இந்திய தன்னார்வ ஆரோக்கியக் கழகம் (Voluntary Health Association of India) இந்த நிறுவனம் ஒரு கணக்கை சொல்கிறது. 

அது, குழந்தைகளை வன்முறைக்கு உள்ளாக்குகின்றவர்களில் 85 சதவீதத்தினர் அந்தக் குடும்பத்தோடு நெருங்கி பழகுபவர்களே!



இவர்கள், அதாவது குடும்பத்தோடு நெருங்கி பழகுபவர்கள் இந்தப் பாதகத்தை எப்படிச் செய்கின்றார்கள் என்பதை ஒரு உண்மைச் சம்பவத்தைக் கொண்டு இப்படி விளக்கலாம். 

நமது பக்கத்து மாநிலம் ஆந்திரா. அதில் அழகியதொரு நகரம் விஜயவாடா. இங்கே காந்திநகர் என்றொரு குடியிருப்பு. இங்கே அங்கிள் இரமணன்என்றால் குடியிருப்பில் அனைவருக்கும் தெரியும். வயது 35. இவர் அந்தப் பகுதியிலுள்ள பெயரும் புகழும் பெற்ற ஒரு பள்ளிக்கூடத்தின் ஆசிரியர். பள்ளியில் பாடஞ்சொல்லித் தருவதிலும் பள்ளியின் முன்னேற்றத்திற்கு உழைப்பதிலும் தன்னிகரற்று விளங்குபவர். அவரது குணத்தை யாரும் குறை சொல்லத் துணியமாட்டார்கள். 

குடியிருப்பில் வாழ்கின்றவர்களுக்கும் உதவி செய்து வாழ்பவர். படிப்பில் பின் தங்கி நிற்கும் குழந்தைகளுக்கும் உதவி செய்வார். இலவசமாக டியூசன்பாடம் சொல்லி தருபவர். தன் மனைவிக்கும் நல்ல கணவராக நடந்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள். இந்தக் குழந்தைகளுக்கும் சிறந்த அப்பாவாக நடந்துக் கொண்டார். இவரிடம் இலவசப்பாடம் பயின்ற குழந்தைகளில் ஒருத்தி தான் பிரீத்தி’.

பிரீத்தி தன் பெற்றோர்களிடம் அங்கிள் இரமணன் அடிக்கடி படுக்கச் சொல்கின்றார் என்று புகார் கூறியபோது பெற்றோர்கள் உனக்கென்ன பைத்தியமா? உதை வாங்குவாய், இப்படியெல்லாம் பேசினால்என அதட்டி வாயை அடைத்து விட்டார்கள். 

     ஒரு வாரம் கடந்தது... 

பிரீத்தி கட்டுப்படுத்த முடியாத பெண்ணாக அழுதுகொண்டே இருந்தாள். இந்த முறை பெற்றோர்களால் அதட்டி அடக்க முடியவில்லை பிரீத்தியை. அவர்கள் அவளின் குறையை அக்கறையோடு கேட்டார்கள். முன்னர் சொன்ன அதே புகாரைத்தான் அவள் சொன்னாள்.

இன்றும் வரச்சொல்லி இருக்கின்றார் என்றாள். அன்று பெற்றோர்கள் அவளைப் போகச் சொல்லிவிட்டு மறைந்திருந்து பார்த்தார்கள். வல்லவர், நல்லவர், பெயர் பெற்றவர், அன்புள்ளம் கொண்ட ஆசிரியர் இரமணன் சிக்கிக் கொண்டார். 

இப்படி அடுத்துக் கெடுப்பவர்களால் தாம் குழந்தைகள் கெடுக்கப்படுகிறார்கள். இப்படிப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குபடுவர்கள் பெண் குழந்தைகள் மட்டும் தான் என்றில்லை. ஆண் குழந்தைகளும் இதுபோல் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். 

அங்கே பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகின்றவர்கள் ஆசிரியர்கள், அவர்களை கால்பந்து, கிரிக்கெட் (கோச்சுகள்) ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி தருபவர்கள் எனப் பட்டியல் நீளுகின்றது. 

 நம் குழந்தைகளை அடுத்தவர்களிடம் பழக விடக்கூடாது என்ற முடிவுக்கு யாரும் வந்துவிடவேண்டாம். தாராளமாகப் பழகவிடுவோம். அதே நேரத்தில் கவனமாகவும் இருப்போம். குழந்தைகளை அடுத்துவருபவர்கள் கெடுத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகுகின்றார்கள் என்பதை நாமாகவே அறிந்திட வேண்டும். அந்த அநியாயத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நாம் எப்படி கண்டுபிடிப்பது?


இதோ சில சமிக்ஞைகள்:


குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகுகின்றார்கள் என்பதை கண்டுபிடிப்பது எப்படி?


1. அடிக்கடி படுக்கையில் சிறுநீர் கழித்து விடுவார்கள்.

2. தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படுவது.

3. படுக்கையிலேயே மலம் கழித்தல்.

4. மனநோயாளி போல் எந்த விஷயத்தை எடுத்தாலும் எரிந்து விழுவது.

5. காரணமில்லாமல் கோபப்படுவது.

6. எடுத்தேன், கவிழ்த்தேன் என ஒரு ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன் நடந்துக் கொள்வது.

7. மறைவான பகுதிகளில் வீக்கம்.

8. மலக்குடலிலிருந்து இரத்தம் கசிதல்.

9. மறைவான இடங்களிலிருந்து இரத்தம் வெளிப்படுதல்.

10. பள்ளியில் நன்றாகப் படித்துக்கொண்டிருந்த குழந்தைகளிடம் திடீரென ஆர்வக்குறைவு ஏற்படல்.

11. விரக்தி வயப்படல்.

12. குழந்தை தன்னுடைய மறைவிடங்களின் மேல் அதிகமாகக் கவனம் செலுத்துவது.

13. வாலிப பருவமுடையவர்களைக் கண்டால் ஒதுங்கி ஓடுவது.

14. அடிக்கடி அச்சப்படுவது, ஒரு வித நடுக்கம் ஏற்படுவது.

15. தற்கொலை முயற்சிகளை செய்வது. 

ஒருமுறை ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆளாகிவிட்டால் அந்த பாதிப்பு அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் அதன் நெஞ்சை விட்டு அகலாது. அடிக்கடி நடுக்கம் போன்ற உடல் பாதிப்புக்களுக்கு ஆளாகும்.

இத்தனைக்கும் அந்தக் குழந்தை எந்தத் தவறும் செய்ததில்லை. சமுதாயம் அழுகிப்போனதற்கு அந்தக் குழந்தை தண்டனையை அனுபவிக்கின்றது!


தீர்வும், தண்டனையும்


குழந்தைகளைப் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குகின்றவர்களை தண்டிப்பதற்கு சட்டத்தில் எதுவுமில்லை. உண்மையைச் சொன்னால் அதற்கான சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை. 



இந்தக் குழந்தைகளைக் கற்பழிப்பு குற்றங்களாக மட்டுமே பதிவு செய்து விசாரிக்கின்றார்கள். சாதாரணமாகக் கற்பழிப்புச் சட்டங்களின் கீழ் வழக்குகள் விசாரிக்கப்படும்போது பாதிக்கப்பட்டவர்களை மூன்று விதமாக சித்திரவதைகளுக்கு ஆளாக்குகின்றார்கள்.

1. அவர்கள் பலர் முன் தாங்கள் எப்படியெல்லாம் கற்பழிக்கப்பட்டார்கள் என்பதை விளக்கிச் சொல்லிட வேண்டும்.

2. பின்னர் கடுமையான மருத்துவ பரிசோதனைகளுக்குத் தங்களை ஆளாக்கிக் கொள்ள வேண்டும்.

3. நீதிமன்றத்தில் பல நெருடலான, மானத்தை வாங்கும் கேள்விகளுக்கு ஆளாகிவிடவேண்டும்.


இஸ்லாம் காட்டும் பாதை


இப்படிக் குழந்தைகள் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகிவிடும்போது ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அது.

இதற்கு அந்தக் குழந்தைகள் செய்த தவறு எதுவுமில்லை. இந்தப் பிஞ்சு வயதிலேயே அவர்கள் தாங்கள் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்க வேண்டுமா?

இதனால் வருமுன் காப்பதே நலம்!
 
குழந்தைகள் குறிப்பாகப் பெண் குழந்தைகளை சற்று முன்னெச்சரிக்கையுடனேயே வளர்க்க வேண்டும். குழந்தைகளை இந்த விஷயங்களில் எந்த அளவுக்கு கவனமாக வளர்க்க வேண்டும் என்பதை இஸ்லாம் இப்படி வலியுறுத்துகின்றது:

குழந்தை ஒன்பது வயதானவுடன் அவள் அன்னிய ஆடவர்களைப் பார்ப்பதும், பழகுவதும் கூடாது. அன்னிய ஆடவர்கள் என்பதில் அவளது தந்தை சகோதரர்கள் நீங்கலாக அனைவரும் அடங்குவார்கள்.

அவர்கள் ஆசிரியர்களாக இருக்கலாம் அல்லது அது போன்ற மற்றவர்களாகவும் இருக்கலாம். பத்து வயது நிரம்பிவிட்டால் சகோதரர்களையும் சகோதரிகளையும் கூட ஒன்றாய் தூங்க (ஒரே அறையில்) அனுமதிக்கக் கூடாது என்கின்றது இஸ்லாம்.

இங்கே ஒரு பெண் தனியாகச் சென்று ஒரு ஆண் ஆசிரியரிடம் பாடம் பயிலுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு குழந்தை விபரமறிந்த குழந்தையாக மாறிடும்போது அது சாதாரணமாக மறைக்கும் பகுதிகளைப் பார்க்க அனுமதிக்கக்கூடாது. அது குழந்தையின் அம்மா, அக்கா போன்ற நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே.

குழந்தைகள் எதிர் பாலரை அடிக்கடி சந்திக்க அனுமதிக்க வேண்டாம். அவர்கள் ஒரே கல்விக்கூடத்தில் படிப்பவர்களாக இருந்தாலும் சரியே. ஒன்பது வயதை அடைந்ததும் அவள் பெண்மை குறித்து அறிந்திட வேண்டியவற்றை கற்றுக் கொடுத்து விடுங்கள். 

இறைவனைப் பற்றிய அச்சத்தை முன்நிறுத்தி, இஸ்லாம் கற்றுத்தரும் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதுதான், நாகரீகம் என்ற பெயரில் காட்டுமிராண்டிகளாக மாறிவிட்ட சமுதாயத்திடமிருந்தும் பாலியல் வன்முறைகளிலிருந்தும் விடுபட இருக்கும் ஒரே வழி.

இவர்களைத் தண்டிக்க சட்டங்கள் இல்லை எனும்போது இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களே ஒரே வழி.



குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லை. 50 சதவிகித குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றார்கள் என்கிறபோது, இங்கே பெண்கள் பர்தா போடக்கூடாது என கூப்பாடு போடுகிறவர்களைக் கண்டால் நம்மால் சிரிக்காமல் இருக்க முடிவதில்லை.


Source


(1)  Indian Express, November 9, 2003.

(2)  தப்ரானி நபிமொழித் தொகுப்பு

(3)  Bringing-Up of Children in Islam
- By MGM.

Sunday 17 February 2013

'இஸ்லாமியர்களும் ஊடகச் சித்தரிப்புகளும்' கருத்தரங்கம்!

   சென்னையில்  பிப்ரவரி 8 ம் தேதி, மாலை 7.00 மணியளவில் நடைபெற்றது.  இதில் மு.குலாம் முஹம்மது, கவிக்கோ அப்துல் ரஹ்மான், தொல்.திருமாவளவன், அ.குமரேசன், எழுத்தாளர் பாமரன், கவின்மலர், ஆளுர் ஷாநவாஸ்,கௌதம் சன்னா ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் நடத்தியது. இதில் வைகறை வெளிச்சம் ஆசிரியர், மு.குலாம் முஹம்மது அவர்களது உரை வீடியோ காட்சி..



 


 
 

தொடர்புடைய மற்ற ஆக்கங்கள்:

விஸ்வரூபங்களுக்கு முன்....


விஸ்வரூபங்களுக்கு முன்....



விஸ்வரூபங்களுக்கு முன்....

1950களில் அமெரிக்கா, உலகில் ஒரு வல்லரசாக உயர்ந்தது. அந்த நாள் முதலே தன்னுடைய உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இறுதியாக இருக்கப் போவது கம்யூனிசத்திற்கு அடுத்தாற்போல், இஸ்லாம்தான் என ஊர்ஜிதப் படுத்திக் கொண்டது.

            இந்த உண்மைகளை அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறையின் செயலாளர், Dulles அவர்கள் தான் எழுதிய (War and Peace) போரும் அமைதியும்என்ற நூலில் தெளிவு படுத்தினார்.

     தனது உலக ஆதிக்கத்தை அமெரிக்கா அன்பாலோ, அரவணைப்பாலோ ஏற்படுத்திட விரும்பவில்லை. மாறாக, போர்களின் மூலமே நிலைநிறுத்திட விரும்பியது. தனது உலக ஆதிக்கத் திட்டங்களுக்கு, மிகப்பெரிய எதிரியாக இஸ்லாத்தைத்தான் பார்த்தது அமெரிக்கா.

     ஆகவே, சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் எதிரான தனது திட்டங்களைக் கூர்மையாக்கியது. இஃது 1980களிலேயே பட்டவர்த்தனமான ஆய்வுகள், அறிக்கைகள் என வந்தன.

     இந்த காலகட்டத்தில் 1975 முதல் 1980 வரை அமெரிக்காவின் சார்பில் முஸ்லிம் நாடுகளில் கள ஆய்வுகளை நடத்தினார், ஆராய்ச்சியாளர் “John Esposito என்பவர். இஃது அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறைக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. இந்த ஆய்வுக்கு அவர் தந்த பெயர் (Voices of Resurgent Islam) “இஸ்லாமிய எழுச்சியின் குரல்கள்

            அதாவது இஸ்லாமிய எழுச்சியொன்று உலகில் குறிப்பாக முஸ்லிம் உலகில் எழுந்து வந்துகொண்டிருக்கிறது என்பதை தனது கள ஆய்வு உறுதி படுத்துகின்றது என்கின்றார்.

                முஸ்லிம் இளைஞர்கள், இஸ்லாத்தை தங்கள் நெஞ்சங்களில் சுமந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் தாங்கள்  வாழும் பகுதிகளில் இஸ்லாம் மேலொங்க வேண்டும், நிலைநாட்டப்பட வேண்டும், அது இழந்து  நிற்கும் கீர்த்தியை மீண்டும் பெற வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த இலட்சியம், தலைமுறைகளைத் தாண்டியும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இளைஞர்களின் இந்த ஆத்ம ஆசையைத்தான் இஸ்லாமிய எழுச்சியின் குரல்கள் என்கின்றார் மற்றும் முறையான திட்டங்களின்றி இதனை முறியடிக்க முடியாது என்கின்றார், ஜான் எஸ்போசிட்டா.

     அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை தனது கொள்கைகளை விவாதிக்க ஓர் ஆவணத்தை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அதில், அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகள் எதன்படி இருக்க வேண்டும் என்ற ஆய்வுக் கட்டுரைகளை இடம்பெற செய்கிறார்கள். அதிலும் ‘John Exposito’ தனது ஆய்வுகளை இடம்பெற செய்தார். தனது ஆய்வு முடிவுகளை அத்தனை ஆய்வாளர்களும், சிந்தனையாளர்களும் விமர்சிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும், மறுக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கம்.

காரணம்,
     விமர்சிப்பவர்களிடமிருந்தும் எதிர்ப்பவர்களிடமிருந்தும் வரும் கருத்துக்கள் தனது ஆய்வு எங்கே பழுது பட்டிருக்கின்றது, என்பதை எடுத்துச் செல்லும்? எங்கே தனது ஆய்வு பழுது பட்டிருக்கின்றது என்பதைத் தெரிந்தால் அதை சீர் செய்துவிடலாம்.

இப்படியொரு பழுதற்ற ஆய்வை அவர் ஏன் கொண்டு வந்திட வேண்டும்?

     இந்த வினாவின் விடை:- இஸ்லாத்தின் மேல் ஒரு பெரும் போரைத் தொடுத்திட வேண்டும். அந்தப் போரில் எந்த நிலையிலும் தோற்றுவிடக் கூடாது. அதனால் பழுதற்ற ஓர் போர்த் திட்டத்தை வரைந்திட வேண்டும் என்பதுதான். இந்த பின்னணியில் விமர்சனங்களை வரவேற்றபின், ஒரு ஆய்வரங்கத்திற்கு ஏற்பாடு செய்தார், ஜான் எஸ்போசிடொ.


        
 இவரது ஆய்வின் மேலுள்ள விவாத அரங்கம், அமெரிக்காவிலுள்ள (College of the Holy Cross) புனித சிலுவையின் கல்லூரியால் ஏற்பாடு செய்யப் பட்டது. இதற்கான முழு செலவையும் (USIA – United States of International Aid) அமெரிக்காவின் சர்வதேச உதவி நிறுவனம் ஏற்றுக் கொண்டது. ஆய்வரங்கம் 1980-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் நடந்தது.

     எதிர் கருத்துகளை அறிந்திட உலகிலுள்ள பல இஸ்லாமிய இயக்கத்தை சார்ந்தவர்களும் அழைக்கப் பட்டிருந்தார்கள். சிலர் கலந்து கொள்ளவும் செய்தார்கள். ஆய்வரங்கத்தின் கொள்கை ரீதியான விவாதத்திற்கு பின்வரும் இஸ்லாமிய அறிஞர்களின் சிந்தனைகளும் எழுத்துகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன.




  
  1)   Sayyid Qutb- Ideologue of Islamic Revival

ஷஹீத் செய்யித் குத்துப் – இஸ்லாமிய மறுமலர்ச்சியின் கொள்கைவாதி.



      2)      Maulana Maududi and the Islamic State

மௌலானா மௌதூதி (ரஹ்)-யும் இஸ்லாமிய அரசும்



   3)   Imam Khomeini – Four Stages of Understandings

இமாம் கொமைய்னி – நான்கு படித்தரங்களான புரிந்து கொள்ளும் தன்மை.





4)   Muhammed Iqbal and the Ialamic state

முகமது இக்பால் அவர்களும் இஸ்லாமிய அரசும்





   5)   Ali Shariati - Ideologue of Iranian Revolution 

அலீ ஷரீயத்தீ - இரானிய மறுமலர்ச்சியின் கொள்கைவாதி.






இங்கே நாம் கவனிக்க வேண்டியது, இஸ்லாமிய சிந்தனைப் போக்கில் வாழும் தலைமுறையால் போற்றப்படும் – படிக்கப்படும் அனைவரும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்கள். இத்தனைக்குப் பிறகு, வகுக்கப்படும் கொள்கைகள், போர்த் திட்டங்கள் முழுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

     அடுத்து, தனது இந்த ஆய்வுகளை ஒரு பெரும் நூலாகவும் வெளியிட்டார். அந்த நூல் 1983-ம் ஆண்டு வெளிவந்தது. அதனை (Oxford University Press) ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பதிப்பகம் என்ற வெளியீட்டு நிறுவனம், வெளியிட்டது.

இந்த நூலின் வெளியீட்டோடு தனது ஆய்வையோ, அல்லது வேறு சொற்களால் சொன்னால் தனது இஸ்லாத்திற்கு எதிரான போர்த் திட்டத்தை வகுப்பதையோ நிறுத்திவிடவில்லை, ஜான் எஸ்போசிடொ.

தனது ஆய்வைத் தொடர்ந்தார், ஆனால் அவருடைய மொத்தத் திட்டத்தையும், இஸ்லாமிய உலகில் நடந்த  ஓர் நிகழ்வு தகர்த்தெறிய தயாரானது.

இன்ஷா அல்லாஹ்….

பகுதி – 2 விரைவில்…
-    M.G.M வைகறை வெளிச்சம்

தொடர்புடைய மற்ற ஆக்கங்கள்:

இஸ்லாமியர்களும் ஊடகச் சித்தரிப்புகளும்- MGM உரை