Saturday 25 April 2015

ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறையின் குடியுரிமை அட்டை – நீலகேனியின் ஆதார் அட்டையை மீறிவிட்டது.

வ்வொரு இந்திய குடிமகனும் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் ஓர் அடையாள அட்டையை கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தகவல் தொழில் நுட்ப வல்லுனரும் இன்போசிஸ் நிறுவனத்தின் இணைத் தோற்றுனருமான திரு. நந்தன் நீலகனி அவர்களின் எண்ணத்தில் உதயமான யோசனை தான் மக்களின் கைரேகை, விழி ரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்களை சேகரித்து அவர்களுக்கென தனியான அடையாள அட்டையை வழங்குவது.

இது இப்போது பொது வழக்கில் ஆதார் அட்டை என அழைக்கப் படுகிறது. இந்த யோசனை இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. 2009இல் இந்திய தனி அடையாள அட்டை ஆணையு ரிமையகம் ஏற்படுத்தப்பட்டு திரு.நீலகனி அவர்கள் அதன் தலைவராக்கப்பட்டார்கள்.

ஆரம்பமாக 16 மாநிலங்களை தேர்வு செய்து UIDAI இதனை ஆரம்பித்தது. அதில் ஐந்து புள்ளிகளை மையப்படுத்தி இந்த பையோமெட்ரிக் தகவல்கள் ஒவ்வொரு தனியாரிடமிருந்து (பொதுமக்கள்) முறையாக பெறப்பட்டன. அதில் முகவரி, வயது போன்ற இந்த விடயத்திற்கு தேவையான முக்கிய தகவல்கள் பெறப்பட்டன.

திரு. நிலேகனியின் நோக்கம் நேர்மையானது. அதேபோல மக்களும் இது போன்றதொரு பல்வகை தேவைகளை பூர்த்தி செய்யும் தனி அடையாள அட்டையை எதிர்ப்பார்த்து கொண்டிருந்ததன் காரணத்தால் இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக குறகிய காலத்திற்குள் 200 மில்லியன் மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டது.

இந்த பணியின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க இந்த அட்டையை பெற வேண்டியதன் அவசியம் அதன் பழங்கள் போன்றவை ஊடகங்களில் இடம் பெற ஆரம்பித்தன. ஊடகங்களில் சில பகுதிகள் எதிர்காலத்தில் புதிய வங்கி கணக்குகள் ஆரம்பிக்கவும், பழைய வங்கி கணக்குகளுக்கும், ஆதார் அட்டை தேவை என செய்திகளை வெளியிட்டன.

நிரந்தர்கா கணக்கு எண் (PAN) அட்டைகளும் ஆதார் அட்டையுடன் இணைக்கப் படும் எனவும் செய்திகளை வெளியிட்டன. இந்திய சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை இலட்சியமாகக் கொண்ட ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறைக்கு மக்கள் அனைவரின் பொருளாதார தகவல்களை அதன் பதிவுகளை பெறுவதற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. இதனுள் எப்படி மூக்கை நுழைக்கலாம் என சிந்திக்க ஆரம்பித்தது.

ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறைக்கு இப்போது ஒரு மிகப்பெரிய யோசனை தென்பட்டது. அது தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயாரிப்பது மற்றும் சிப் - உட்பொதிந்த பல்வேறு தேவைகளுக்கான அடையாள அட்டையை விநியோகிப்பது.

இதனை செயல்படுத்த இந்திய பொதுப் பதிவாளர் அலுவலகத்தை உபயோகித்துக் கொள்வது என முடிவெடுத்தது. RGI இன் வேலை அதன் பொறுப்பு என்னவென்றால் மக்கள் தொகை தகவல்களை பராமரிப்பது மற்றும் முறையான இடைவெளியில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது. அதற்கு இது ஓர் இமாலயப் பணி.

RGI மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கீழ் இயங்கியதனால் ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறை வேலை சுலபமாகிப் போனது. ஏனெனில் ஐ.பி. மத்திய உள்துறையின் கீழ் வந்தாலும் நடப்பில் மத்திய உள்துறையின் கீழ் உள்ள எல்லாமே ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறைக்கு கீழ் வந்து விடும்.

ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறை அரசாங்கத்தின் அனுமதியின்றி (ஐ.பி.-க்கு  எதற்காகவும் யாருடைய உதவியும் தேவையில்லை) RGI – ஐ இதற்காக பணித்தது. அதில் குரியுரிமை அட்டை வழங்குவதற்காக ஆதார் அட்டையில் மக்களிடம் தகவல்கள் ஐந்து வகைகளில் எடுக்கப்பட்டது போல அல்லாமல் பதினைந்து வகைகளில் பயோமெட்ரிக் தகவல்கள் எடுக்க பணிக்கப்பட்டது. ஏற்கனவே பல பொறுப்புகளை சுமந்து கொண்டிருந்த RGI க்கு இது ஓர் இமாலயப்பணி. எனினும் அது ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறையை மறுத்து பேசுவதற்கில்லை. விளைவு, பல மாநிலங்களில் RGI இந்த தகவல்களை சேகரிக்கும் பணியை ஆரம்பித்தது.
இது திரு. நிலேகனி அவர்களையும் மாநில அரசுகளையும் ஆச்சரியப்படுத்தியது. குழப்பியது. மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு வேலையை காப்பியடிப்பது போன்ற மற்றொரு வேலை ஏன் ஆரம்பிக்கப்படுகிறது என்பதை யாரும் அறிந்துகொள்ள இயலவில்லை. திரு. நிலேகனி அவர்கள் இந்த விடயத்தை UIDAI இன் அமைச்சரவை குழுவின் தலைவரான பிரதம மந்திரியிடம் எடுத்து சென்றார். பிரதம மந்திரிக்கு அதிர்ச்சிதான். ஆனாலும் அவரால் இதனை தடுத்து நிறுத்த இயலவில்லை. ஏனெனில் இது ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறையின் திட்டம்.

இறுதியில் அவர் ஜனவரி 2012 இல் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தினார். அதில் வினோதமான சமரச சூத்திரம் தீர்வாக பெறப்பட்டது.

    1.ஏற்கனவே பணியாற்றிக் கொண்டிருக்கும் 16 மாநிலங்களில் தன் பணியை தொடரும். மீதமுள்ள மாநிலங்களில் RGI பயோமெட்ரிக் தகவல்களை பெரும் வேலையை செய்யும்.
2.UIDAI பணியாற்றிக் கொண்டிருந்தாலும் கூட நாடெங்கும் RGI முகாம்களை அமைக்கும்.3.குடியுரிமை அட்டை பெறுவது கட்டாயமாக்கப்படும். UIDAI விருப்பப் படுபவர்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குரியுரிமை ஆட்டையில் UIDAI ஆல் உருவாக்கப்பட்ட ஆதார் எண் அதில் இருக்கும்.

2013 இல் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட UIDAI மசோதாவும் புதிரானதே. அது இவ்வாறு கூறியது; “ஆதார் அட்டை இந்தியாவின் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் வழங்கப்படும். ஆனால் அது குடியுரிமையை வழங்காது.”

மற்றொரு வார்த்தையில் சொல்வதென்றால் மக்கள் RGI இன் குடியுரிமை அட்டையையும், ஆதார் அட்டையுடன் வைத்திருக்க வேண்டும். ஆதார் அட்டை கட்டாயமற்றதாகவும் குடியுரிமை அட்டை கட்டாயமானதாகவும் ஆக்கப்படும். ஆனால் கேள்வி என்னவென்றால் ஏன் இந்த நகல் எடுக்கும் இரட்டைப் பணி?

ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறையின் பிராமணிய சித்தாந்தத்தை அதன் கொள்கையை நன்றாக அறிந்தவர்களுக்கு இதற்கான விடை எளிமையானது.

இந்திய மக்களை அவர்களின் வாழ்வின் அனைத்து பாகங்களிலும் கட்டுப்படுத்த அவர்களின் தனி உரிமையில் தலையிட ஐ.பி. விரும்புகிறது. இதன் மூலம் அரசியல் அதிகாரத்தை அடையா மலேயே பிராமனிஸ்டுகள் இந்த தேசம் முழுவதையும் கட்டுப்படுத்த இயலும்.


பயோமெட்ரிக் முறையில் எடுக்கப்படும் இந்த 15 வகையான தகவல்கள் ஐ.பி. ஆல் உருவாக்கி தரப்பட்டது. இதன் மூலம் நாட்டின் எந்த வல்லமை மிகுந்தவரின் தகவலும் அவரின் பொருளாதார பண பரிவர்தனைகள் ஐ.பி. என்ற உளவுத்துறையின் கைகளுக்கு சென்றுவிடும். ஒரு பொத்தானை அமுக்கும் நேரத்தில் நாட்டின் மிக உயர்ந்த மனிதர்களின் தகவல் ஐ.பி. ஆல் பெறப்படும். இந்த தகவல் தேவைப்படும் போது ஐ.பி. ஆல் உபயோகப்படுத்தப்படும். ஏன் நமது அரசாங்கம் ஐ.பி. இன் இந்த சதி திட்டத்தை புரிந்து கொள்ள மறுக்கிறது.

ஆதாரம் : 26/11 விசாரணை நீதித்துறையின் மயங்கியது ஏன்? பக்கம் 321 முதல் 325, ஆசரியர் எஸ்.எம். முஷ்ரிஃப (முன்னாள் ஐ.ஜி. மகாராஸ்டிரா மற்றும் ஆசரியர் கர்கரேயை கொலை செய்தது யார்?)

இந்த நூல் தற்போது தள்ளுபடி விலையில் 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வாசகர்கள் கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும். இன்ஷா அல்லாஹ்.




No comments:

Post a Comment