Sunday, 17 February 2013

விஸ்வரூபங்களுக்கு முன்....



விஸ்வரூபங்களுக்கு முன்....

1950களில் அமெரிக்கா, உலகில் ஒரு வல்லரசாக உயர்ந்தது. அந்த நாள் முதலே தன்னுடைய உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இறுதியாக இருக்கப் போவது கம்யூனிசத்திற்கு அடுத்தாற்போல், இஸ்லாம்தான் என ஊர்ஜிதப் படுத்திக் கொண்டது.

            இந்த உண்மைகளை அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறையின் செயலாளர், Dulles அவர்கள் தான் எழுதிய (War and Peace) போரும் அமைதியும்என்ற நூலில் தெளிவு படுத்தினார்.

     தனது உலக ஆதிக்கத்தை அமெரிக்கா அன்பாலோ, அரவணைப்பாலோ ஏற்படுத்திட விரும்பவில்லை. மாறாக, போர்களின் மூலமே நிலைநிறுத்திட விரும்பியது. தனது உலக ஆதிக்கத் திட்டங்களுக்கு, மிகப்பெரிய எதிரியாக இஸ்லாத்தைத்தான் பார்த்தது அமெரிக்கா.

     ஆகவே, சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் எதிரான தனது திட்டங்களைக் கூர்மையாக்கியது. இஃது 1980களிலேயே பட்டவர்த்தனமான ஆய்வுகள், அறிக்கைகள் என வந்தன.

     இந்த காலகட்டத்தில் 1975 முதல் 1980 வரை அமெரிக்காவின் சார்பில் முஸ்லிம் நாடுகளில் கள ஆய்வுகளை நடத்தினார், ஆராய்ச்சியாளர் “John Esposito என்பவர். இஃது அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறைக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. இந்த ஆய்வுக்கு அவர் தந்த பெயர் (Voices of Resurgent Islam) “இஸ்லாமிய எழுச்சியின் குரல்கள்

            அதாவது இஸ்லாமிய எழுச்சியொன்று உலகில் குறிப்பாக முஸ்லிம் உலகில் எழுந்து வந்துகொண்டிருக்கிறது என்பதை தனது கள ஆய்வு உறுதி படுத்துகின்றது என்கின்றார்.

                முஸ்லிம் இளைஞர்கள், இஸ்லாத்தை தங்கள் நெஞ்சங்களில் சுமந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் தாங்கள்  வாழும் பகுதிகளில் இஸ்லாம் மேலொங்க வேண்டும், நிலைநாட்டப்பட வேண்டும், அது இழந்து  நிற்கும் கீர்த்தியை மீண்டும் பெற வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த இலட்சியம், தலைமுறைகளைத் தாண்டியும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இளைஞர்களின் இந்த ஆத்ம ஆசையைத்தான் இஸ்லாமிய எழுச்சியின் குரல்கள் என்கின்றார் மற்றும் முறையான திட்டங்களின்றி இதனை முறியடிக்க முடியாது என்கின்றார், ஜான் எஸ்போசிட்டா.

     அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை தனது கொள்கைகளை விவாதிக்க ஓர் ஆவணத்தை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அதில், அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகள் எதன்படி இருக்க வேண்டும் என்ற ஆய்வுக் கட்டுரைகளை இடம்பெற செய்கிறார்கள். அதிலும் ‘John Exposito’ தனது ஆய்வுகளை இடம்பெற செய்தார். தனது ஆய்வு முடிவுகளை அத்தனை ஆய்வாளர்களும், சிந்தனையாளர்களும் விமர்சிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும், மறுக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கம்.

காரணம்,
     விமர்சிப்பவர்களிடமிருந்தும் எதிர்ப்பவர்களிடமிருந்தும் வரும் கருத்துக்கள் தனது ஆய்வு எங்கே பழுது பட்டிருக்கின்றது, என்பதை எடுத்துச் செல்லும்? எங்கே தனது ஆய்வு பழுது பட்டிருக்கின்றது என்பதைத் தெரிந்தால் அதை சீர் செய்துவிடலாம்.

இப்படியொரு பழுதற்ற ஆய்வை அவர் ஏன் கொண்டு வந்திட வேண்டும்?

     இந்த வினாவின் விடை:- இஸ்லாத்தின் மேல் ஒரு பெரும் போரைத் தொடுத்திட வேண்டும். அந்தப் போரில் எந்த நிலையிலும் தோற்றுவிடக் கூடாது. அதனால் பழுதற்ற ஓர் போர்த் திட்டத்தை வரைந்திட வேண்டும் என்பதுதான். இந்த பின்னணியில் விமர்சனங்களை வரவேற்றபின், ஒரு ஆய்வரங்கத்திற்கு ஏற்பாடு செய்தார், ஜான் எஸ்போசிடொ.


        
 இவரது ஆய்வின் மேலுள்ள விவாத அரங்கம், அமெரிக்காவிலுள்ள (College of the Holy Cross) புனித சிலுவையின் கல்லூரியால் ஏற்பாடு செய்யப் பட்டது. இதற்கான முழு செலவையும் (USIA – United States of International Aid) அமெரிக்காவின் சர்வதேச உதவி நிறுவனம் ஏற்றுக் கொண்டது. ஆய்வரங்கம் 1980-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் நடந்தது.

     எதிர் கருத்துகளை அறிந்திட உலகிலுள்ள பல இஸ்லாமிய இயக்கத்தை சார்ந்தவர்களும் அழைக்கப் பட்டிருந்தார்கள். சிலர் கலந்து கொள்ளவும் செய்தார்கள். ஆய்வரங்கத்தின் கொள்கை ரீதியான விவாதத்திற்கு பின்வரும் இஸ்லாமிய அறிஞர்களின் சிந்தனைகளும் எழுத்துகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன.




  
  1)   Sayyid Qutb- Ideologue of Islamic Revival

ஷஹீத் செய்யித் குத்துப் – இஸ்லாமிய மறுமலர்ச்சியின் கொள்கைவாதி.



      2)      Maulana Maududi and the Islamic State

மௌலானா மௌதூதி (ரஹ்)-யும் இஸ்லாமிய அரசும்



   3)   Imam Khomeini – Four Stages of Understandings

இமாம் கொமைய்னி – நான்கு படித்தரங்களான புரிந்து கொள்ளும் தன்மை.





4)   Muhammed Iqbal and the Ialamic state

முகமது இக்பால் அவர்களும் இஸ்லாமிய அரசும்





   5)   Ali Shariati - Ideologue of Iranian Revolution 

அலீ ஷரீயத்தீ - இரானிய மறுமலர்ச்சியின் கொள்கைவாதி.






இங்கே நாம் கவனிக்க வேண்டியது, இஸ்லாமிய சிந்தனைப் போக்கில் வாழும் தலைமுறையால் போற்றப்படும் – படிக்கப்படும் அனைவரும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்கள். இத்தனைக்குப் பிறகு, வகுக்கப்படும் கொள்கைகள், போர்த் திட்டங்கள் முழுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

     அடுத்து, தனது இந்த ஆய்வுகளை ஒரு பெரும் நூலாகவும் வெளியிட்டார். அந்த நூல் 1983-ம் ஆண்டு வெளிவந்தது. அதனை (Oxford University Press) ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பதிப்பகம் என்ற வெளியீட்டு நிறுவனம், வெளியிட்டது.

இந்த நூலின் வெளியீட்டோடு தனது ஆய்வையோ, அல்லது வேறு சொற்களால் சொன்னால் தனது இஸ்லாத்திற்கு எதிரான போர்த் திட்டத்தை வகுப்பதையோ நிறுத்திவிடவில்லை, ஜான் எஸ்போசிடொ.

தனது ஆய்வைத் தொடர்ந்தார், ஆனால் அவருடைய மொத்தத் திட்டத்தையும், இஸ்லாமிய உலகில் நடந்த  ஓர் நிகழ்வு தகர்த்தெறிய தயாரானது.

இன்ஷா அல்லாஹ்….

பகுதி – 2 விரைவில்…
-    M.G.M வைகறை வெளிச்சம்

தொடர்புடைய மற்ற ஆக்கங்கள்:

இஸ்லாமியர்களும் ஊடகச் சித்தரிப்புகளும்- MGM உரை

Tuesday, 12 February 2013

அஃப்சல்குரு அவசரபலி: நமது கூட்டுமனசாட்சி திருப்தி அடைந்ததா? அல்லது நமது இரத்தத் தாகம் தணிந்ததா?



     அஃப்சல்குருவின் தூக்கு குறித்து அருந்ததிராய் என்ற நாடறிந்த ஆய்வாளர் ஓர் கட்டுரையைதி ஹிந்துநாளிதழில் 10/02/2013-இல் எழுதி இருந்தார். அந்தக் கட்டுரையின் முக்கிய பகுதிகளை இங்கே தருகின்றோம்.

     இந்த நீண்ட கட்டுரையில் குறிப்பிட்டிருந்த பல தகவல்களை நாம் ஜனவரி 2013, வைகறை வெளிச்சத்தில் தந்திருந்தோம். அதில் இடம் பெறாதவற்றை இங்கே தருகின்றோம்.

     அருந்ததிராய், அக்கட்டுரைக்கு நக்கலாகஒரு முழுமையான ஜனநாயகம் (A Perfect Democracy) என தலைப்பிட்டிருந்தார். உண்மையில் இதற்குஎன்னடா இது ஜனநாயகம்?” என்று பொருள்.

அஃப்சல்குருவுக்கு எதிராக எந்த சாட்சியமும் நிருபிக்கப்படவில்லை:

     அவன் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நீண்ட நாட்களாக இருந்து வந்தவர். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் காவல் துறையிடம் சரணடைந்தவர். பின்னர் அவரை காவல் துறையினர் தங்களது சதித்திட்டத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள். இதுதான் உண்மை!

கைதுஎப்படி?

      அஃப்சல்குருவை எப்படி கைது செய்தார்கள்? என்பதற்கு காவல் துறையினர் சொன்ன பதில், “அன்று நாடாளுமன்றத் தாக்குதலின் மூளை எனக் குற்றம் சாட்டப்பட்ட S.A.R. ஜீலானிதான் தகவல் தந்தார்என்றார்கள்.

  அதாவது ”S.A.R. ஜீலானியை கைது செய்தோம், அவர்தான் எங்களை அஃப்சல்குருவிடம் அழைத்துச் சென்றார்என்றார்கள்.     ஆனால் அஃப்சல்குருவை கைது செய்ய அனுப்பப்பட்ட கைது ஆவணங்கள், S.A.R.ஜீலானி கைது செய்யப்படுவதற்கு முன்பே அனுப்பப்பட்டு விட்டன என்பதை தெளிவுபடுத்தின.



 நீதிமன்றத்தின் பார்வைக்கு இவற்றைக் கொண்டு வந்தபோது, இதனை நீதிமன்றம் ”a Malicial Contradiction” அப்பட்டமான முரண்பாடு என்றது. (இந்த அடிப்படையில் வழக்கை அது தள்ளுபடி செய்திருக்கலாம். அப்பாவிகளைத் தூக்கில் போடுவதற்கு, நீதிமன்றங்களும் துணை நின்றதால், நீதிமன்றம் ஒரே சொல்லில் அதிருப்தியைத் தெரிவித்துவிட்டு விட்ட்து.) இது நீதிமன்ற அநீதி.

சிம்கார்டு:
            அஃப்சல்குருவுக்கு சிம்கார்டை விற்பனை செய்தவர் என்று ஒருவரை அழைத்து வந்தார்கள். அவரது பெயர் கமல் கிஷோர். அவர் அஃப்சல்குருவுக்கு ஒரு சிம்கார்டை  விற்றதாகவும், அது டிசம்பர் 4, 2001 அன்று விற்பனை செய்யப்பட்ட்தாகவும் கூறினார். இந்த சிம்கார்டு வழியாகத்தான் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட எல்லா தீவிரவாதிகளும் ஒன்றிணைக்கப்பட்டதாகக் கூறினார்கள்.

           ஆனால், நீதிமன்றத்தில் அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட (Call Records) கைப்பேசி பதிவுகள் ,இந்தசிம்கார்டுநவம்பர் 6, 2001-இல் இருந்தே செயல்பட தொடங்கி இருந்தது என்பதை உறுதிபடுத்தின. ”இது போன்ற போலி ஆவணங்கள், தயாரிக்கப்பட்ட சாட்சியங்கள், நீதிமன்றத்தில் தோலுரித்து காட்டப்பட்டன. ஆனால், நீதிமன்றங்கள் காவல்துறையை மிகவும் மிருதுவாக கண்டித்தன .பொய்யை சாட்சியமாக ஏற்றுக் கொண்டன.”
  
 













 

 

 

 

 

 

லேப்டாப்:

     அஃபசலிடமிருந்து இரண்டு முக்கிய தடயங்கள் அல்லது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் காட்டப்பட்டன. அவை 1) அவருடைய லேப்டாப், 2) அவருடைய செல்போன். இவற்றை கைப்பற்றியதாக எழுதப்பட்ட காதிதங்களில் கையெழுத்திட்ட சாட்சியங்கள், இரண்டு காவல் துறையினர்தாம். இவர்கள்தாம் அஃப்சல்குருவை நீண்ட நாட்கள் காவலில் வைத்திருந்தவர்கள், சித்திரவதை செய்தவர்கள், பணம் பறித்தவர்கள். (இந்த விவகாரத்தை நாம், வைகறை வெளிச்சம் ஜனவரி இதழில் வெளியிட்டிருந்தோம்.) முக்கிய ஆவணங்களை கைப்பற்றினால் அவற்றை சீல்வைத்துவிட வேண்டும். ஆனால் இவை எந்த நிலையிலும் சீல் வைக்கப்படவில்லை.

     இந்த லேப்டாப்-ஐ அவர்கள் திறந்தபோது அந்த லேப்டாப்பில், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்குத் தயாரிக்கப்பட்ட போலி நுழைவுச் சீட்டுகள், போலி அடையாள அட்டைகள் இவை மட்டுமே இருந்தன. இவை அல்லாமல் வேறேதுமில்லையா? என்று கேட்டதற்கு, காவல் துறையினர் கூறிய பதில், “இருந்தன, ஆனால் அவை அஃப்சல்குருவால் அழிக்கப்பட்டு விட்டன.” அதாவது, அஃப்சல்குரு தன்னை தூக்கில் போட்டிடத் தேவையான ஆவணங்களை மட்டுமே வைத்திருந்தார் மீதியை அழித்து விட்டார் எனக் கூறி இருந்தார்கள். எப்படி இருக்கிறது இவர்களின் நீதிபரிபாலனம்?

வழக்கறிஞர்:

     அஃப்சலுக்கு கீழ் நீதிமன்றங்களில், வழக்கறிஞர்களே வைக்கப்படவில்லை. உயர்நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வழக்கறிஞர், அஃப்சல்குருவை ஒரு முறை கூட சந்திக்கவில்லை.

இவற்றிற்கெல்லாம்மேலாக:

            நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சென்றவர்களுடன் அஃப்சல்குரு செல்லவில்லை. அப்படி குற்றப் பத்திரிக்கையும் கூட அவர் மீது குற்றம் சுமத்திடவில்லை.

     அவரால் யாரும் கொலை செய்யப்படவில்லை. ஆனாலும், அவர் தூக்கிலடப்படுகின்றார், சிலரைத் திருப்திப்படுத்திட.

உண்மை:

   கிடைக்கும் சாட்சியங்களை முறையானதோர் ஆய்வுக்கு உட்படுத்தினால் உண்மையிலேயே நாடாளுமன்றத் தாக்கிட திட்டமிட்டவர்கள், அதனை செயல்படுத்தியவர்கள் கண்டுபிடிக்கப் படுவார்கள். அவர்களையெல்லாம் காப்பற்றத்தான், அஃப்சல்குரு தூக்கிலிடப்பட்டுள்ளார்.

பழியும்பாவமும்:

     நாடாளுமன்றத்தைத் தாக்கிடவேண்டும், பழியை முஸ்லிம்கள் மீது, குறிப்பாக கஷ்மீர் முஸ்லிம்கள் மீது போட வேண்டும், முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டிட வேண்டும், என்பதற்காக அதனை திட்டமிட்டவர்களும் செயல்படுத்தியவர்களும் ‘STF’ என்ற கஷ்மீர் சிறப்புப் படையினரும் டெல்லி (Special Police Cell) தனிகாவல் துறையினரும்தான். இதனை விரிவாக வைகறைவெளிச்சம் ஜனவரி2013 இதழ், நாடாளுமன்றத் தாக்குதல் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் என்ற நூல் இவற்றில் குறிப்பிட்டிருந்தோம். 
                                                      -   MGM

தொடர்புடைய மற்ற ஆக்கங்கள்:
  


Sunday, 10 February 2013

நாடாளுமன்றத் தாக்குதல்: அருந்ததிராய் எழுப்பும் 13 கேள்விகள்



1) நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே காவல்துறையும் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஃபாசிச அரசாங்கமும் ஓர் அறிவிப்பை செய்து கொண்டே இருந்தன. அது, நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்பதே, 2001ம் ஆண்டு டிசம்பர் 12ம் நாள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் (Informal Meeting) நிச்சயமாக நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று அன்றைய பிரதமர் வாஜ்பேய் திட்டவட்டமாக ஓர் எச்சரிக்கையை விடுத்தார்.

டிசம்பர் 13ம் நாள் நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க பாதுகாப்புபடையினருக்குக் கடுமையான பயிற்சிகள் அளிக்கபட்டன. நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் சிறப்புக் காவல்கள் போடப்பட்டன. இந்நிலையில் வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது?

2)  நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் டெல்லியில் இயங்கும் சிறப்புக் காவல் படைப் பிரிவு இந்த நாடாளுமன்றத் தாக்குதல் லஷ்கர்--தொய்பா, ஜெய்ஷ்--முஹம்மத் போன்ற அமைப்புகளின் திட்டமிட்ட செயல் என்று அறிவித்தது. அத்தோடு இந்தத் தாக்குதல் முஹம்மது என்பவரல் தலைமையேற்று நடத்தப்பட்ட தாக்குதல் என்றது. இந்த முஹம்மது என்பவர்தான் 1998ல் இந்திய விமானம் ஐ..814ஐ கடத்தியவர் என்றும் அறிவித்தது. வழக்கு முடிந்த போது இவை எதுவுமே எந்த நீதிமன்றத்திலும் நிருபிக்கப்படவில்லை. இதுதான் உண்மைநிலை என்றால் இவர்களால் எப்படி நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் இது போன்ற அறிவிப்புகளை செய்ய முடிந்த்து? அப்படி அறிவிக்க இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது?


3)  நாடளுமன்றத் தாக்குதல் நடைபெற்றபோது அதனை முழுமையாக நாடளுமன்ற வளாகத்திலுள்ள கேமராக்களாலும் நாடளுமன்ற அரங்கிற்குள் இருந்த (Close Circuit TV- CCTV) க்ளோஸ் சர்க்யூட் டிவி என்ற சி.சி.டி.விகளாலும் பதியப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாடளுமன்ற உறுப்பினர் கபில்சிபால் இந்தத் தொலைக்காட்சிப் பதிவை நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு திரையிட்டுக் காட்டவேண்டும் என அன்று நாடளுமன்றத்தில் குரல் கொடுத்தார். அவரை அப்போதைய மேல்சபையின் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா ஆதரித்தார். நஜ்மா ஹெப்துல்லா அவர்கள் நாடளுமன்றத் தாக்குதல் குறித்த விளக்கங்களில் பல குழப்பங்கள் இருக்கின்றன என்றும் கூறினார். காங்கிரஸ் தலைமை கொறடாவான பிரியரஞ்சன்தாஸ் முன்ஷிஅவர்கள், “நாடளுமன்றத்தைத் தாக்க வந்த காரிலிருந்து 6 பேர் இறங்கிப் போவதை நான் பார்த்தேன், ஆனால் 5 பேர் மட்டுமே கொல்லப்பட்டார்கள். நாடளுமன்ற வளாகத்தின் தொலைக்காட்சிப் பதிவுகள் (CCTV) தெளிவாக 6 பேரைக் காட்டியது.” என்று கூறினார். பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி சொல்வது சரியானதுதான் என்றால் காவல்துறையினர் ஏன் ஐந்து பேர்கள்தான் காரில் வந்தனர் என சாதிக்கின்றனர்? அந்த ஆறாவது நபர் யார்? அவர் இப்போது எங்கே இருக்கின்றார்? அந்தத் தொலைக்காட்சிப் பதிவை ஏன் காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை? அதை ஏன் பொதுமக்களுக்கு காட்டவில்லை?

4)  இது போன்ற கேள்விகளை அப்போது நாடாளுமன்றத்தில் எல்லோரும் எழுப்பினார்கள். ஆனால் உடனேயே நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திப்போடப்பட்டது. அது ஏன்?

5)  நாடளுமன்றம் தாக்கப்பட்ட உடன் அப்போதைய அரசு நாடளுமன்றத் தாக்குதலில் பாகிஸ்தானின் கை இருக்கின்றது என்பதற்கு மறுக்கவியலாத சாட்சியங்கள் இருப்பதாக அறிவித்தது. அத்தோடு 50 லட்சம் படைவீரர்களை இந்தியா-பாகிஸ்தான் எல்லையை நோக்கிக் கொண்டு சென்றது. இந்தியத் திருநாடு ஓர் அணுஆயுதப் போரை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. அஃப்சல் என்பவரை சித்தரவதை செய்து வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைத் தவிர இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது? இந்த ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இவர்கள் தங்களிடம் இருப்பதாகச் சொன்ன அந்த மறுக்க முடியாத அத்தாட்சி என்ன?

6)  டிசம்பர் 13 அன்று நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு முன்பே பாகிஸ்தான் எல்லையை நோக்கி படைகளை நகர்த்தியதாக பல செய்திகள் கூறுகின்றன. இது உண்மையா? பொய்யா?

7)  நமது படைகளை போர் பீதியுடன் ஒரு வருடத்திற்கு பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தி வைத்திருந்தோம். இதற்கு நாம் செய்த வீண் செலவு எவ்வளவு? இதில் நமது இராணுவ வீரர்கள் எத்தனை பேர் மாண்டார்கள்? கன்னி வெடிகளை நாம் சரிவர கையாளாததால், இறந்த குடிமக்கள் எத்தனை பேர்? நமது இராணுவ வாகனங்கள் இடித்துத் தகர்ந்ததால் உயிரிழந்த கிராமவாசிகள் எத்தனை பேர்? கழனிகளில் கன்னி வெடிகளைப் புதைத்ததால் உயிரிழந்த நமது விவசாயிகள் எத்தனை பேர்?

8)  கிரிமினல் வழக்கு ஒன்றில் புலன் விசாரணை மேற்கொள்ளும்போது சம்பவம் நடந்த இடத்தில் கிடைக்கின்ற தகவல்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது எப்படி என்பதை நிருபிக்க வேண்டியது காவல்துறையின் கடமை, அவ்வாறு இருக்க காவல்துறையினர் முஹம்மது அஃப்சல் அவர்களைக் குற்றவாளி என எப்படிக் கண்டுபிடித்தனர்? காவல்துறையின் சிறப்புப்பிரிவு S.A.R.ஜீலானி என்பவர் மூலமாகத்தான் அஃப்சலைக் கண்டுபிடித்த்தாக கூறுகின்றது. ஆனால் அஃப்சலைக் கைது செய்வதற்கான அவரச செய்திகள் ஜீலானி அவர்களைக் கைது செய்வதற்கு முன்பே அனுப்பப்பட்டு விட்டன. அவ்வாறு இருக்க எப்படி காவல்துறையினர் அஃப்சலை நாடளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப் படுத்துகின்றனர்?

9)  காவல்துறையும், நீதிமன்றங்களும் அஃப்சலை நமது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த ஓர் போராளி என்றும் அவர் ஜம்மு கஷ்மீரின் STF (Special Task Force) சிறப்புக் காவல்படையினர் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் ஒத்துக் கொள்கின்றன. அப்படி இருக்க தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஒருவர் எப்படி நாடளுமன்றத்தையே தாக்குகின்ற பெரும் சதியில் ஈடுபட முடியும். இதற்கு சிறப்புக் காவல்படையினர் தரும் விளக்கம் என்ன?

10) லஷ்கர்--தொய்பா, ஜெய்ஷ்--முஹம்மத் போன்ற அமைப்புகள், கஷ்மீரின் சிறப்புக் காவல்படையினர் கீழ் இருந்த ஒருவரை அதிலும் குறிப்பாக சிறப்புக் காவல்படையினரால் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஒருவரை நம்பி நாடளுமன்றத் தாக்குதல் போன்ற பெரும் பணிகளில் இறங்குவார்களா?

11) தன்னுடைய வாக்குமூலத்தில் அஃப்சல் என்பவர் தனக்கு முஹம்மது என்பவரை அறிமுகப் படுத்தியவர் தாரீக் தான் என்று கூறியுள்ளார். இந்த தாரீக் என்பவர்தான் முஹம்மது என்பவரை டெல்லிக்கு அழைத்து வரும்படி கூறியதாகவும் கூறுகிறார். தாரீக் என்பவரின் பெயர் காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையிலும் இடம் பெற்றுள்ளது. இந்தத் தாரீக் என்பவர் யார்? அவர் இப்போது எங்கே இருக்கின்றார்

12) 2001 டிசம்பர் மாதம் 19ம் நாள், அதாவது நாடளுமன்றத்தாக்குதல் நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, மஹாராஷ்டிராவில் உள்ளதானேமாநகரக் காவல்துறை ஆணையர் எஸ்.எம். சங்காரி என்பவர் ஓர் அறிவிப்பைச் செய்தார். அந்த அறிவிப்பில், ”நாடாளுமன்றத் தாக்குதலின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முஹம்மது யாசீன் ஃபதா முஹம்மத் (என்ற அபூ ஹம்சா) என்பவர் லஷ்கர்--தொய்பாவைச் சார்ந்தவர். அவரை நான் மும்பையில் நவம்பர் 2000ல் கைது செய்தேன். கைது செய்தவுடன் அவரை ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளேன்.” என்று கூறினார். தன்னுடைய வாக்குமூலத்தை உறுதிப் படுத்தும் வகையிலான வலுவான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மஹாராஷ்டிரா காவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் சொல்வது உண்மையானால் ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட முஹம்மது யாசீன் எப்படி நாடளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும்?

காவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் கூறுவது பொய்யாக இருந்தால் முஹம்மது யாசீன் என்பவர் எங்கே இருக்கிறார்?

நாடளுமன்றத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேரும் யார் யார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லையே ஏன்?

13) இந்த வினாக்களை எழுப்பும் அருந்ததிராய், “இவற்றை ஆழமாக ஆராய்கின்றபோது நாடளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினரின் (குறிப்பாக ஜம்மு கஷ்மீரின் சிறப்புக் காவல்படை-யின்) கரங்கள், உதவிகள், ஈடுபாடுகள் ஆகியவை இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.” அத்தோடு இந்த செய்திகள் நமக்குள் அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்த வேண்டாம். அரசாங்கங்களும், புலனாய்வுத் துறைகளும் இது போன்றே யுக்திகளைக் கையாண்டு தங்களுடைய இலக்குகளை அடைந்து கொள்வது வரலாற்றில் நிரம்பவே நடந்திருக்கின்றது. 1933ல் ஜெர்மனியில் (Reichstag) ரீசஸ்டாக் என்பதை கொளுத்தித்தான் நாஜிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். அதேபோல்தான் ஐரோப்பாவின் உளவுத் துறையினர் இத்தாலியில் ரெட் பிரிகேட் என்ற போராளிக் குழுவை மக்கள் மன்றத்தில் தீவிரவாதிகளாகக் காட்டினார்கள். பின்னர் அழித்தார்கள். மேலே உள்ள கேள்விகளை அரசாங்கத்தை நோக்கிவிடுத்துவிட்டு அருந்ததிராய் கூறுகின்றார்:

          ”இதற்கு நம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பதிலெல்லாம் வெறும் மௌனம் மட்டும் தான்

 -M.G.M