Tuesday, 12 February 2013

அஃப்சல்குரு அவசரபலி: நமது கூட்டுமனசாட்சி திருப்தி அடைந்ததா? அல்லது நமது இரத்தத் தாகம் தணிந்ததா?



     அஃப்சல்குருவின் தூக்கு குறித்து அருந்ததிராய் என்ற நாடறிந்த ஆய்வாளர் ஓர் கட்டுரையைதி ஹிந்துநாளிதழில் 10/02/2013-இல் எழுதி இருந்தார். அந்தக் கட்டுரையின் முக்கிய பகுதிகளை இங்கே தருகின்றோம்.

     இந்த நீண்ட கட்டுரையில் குறிப்பிட்டிருந்த பல தகவல்களை நாம் ஜனவரி 2013, வைகறை வெளிச்சத்தில் தந்திருந்தோம். அதில் இடம் பெறாதவற்றை இங்கே தருகின்றோம்.

     அருந்ததிராய், அக்கட்டுரைக்கு நக்கலாகஒரு முழுமையான ஜனநாயகம் (A Perfect Democracy) என தலைப்பிட்டிருந்தார். உண்மையில் இதற்குஎன்னடா இது ஜனநாயகம்?” என்று பொருள்.

அஃப்சல்குருவுக்கு எதிராக எந்த சாட்சியமும் நிருபிக்கப்படவில்லை:

     அவன் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நீண்ட நாட்களாக இருந்து வந்தவர். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் காவல் துறையிடம் சரணடைந்தவர். பின்னர் அவரை காவல் துறையினர் தங்களது சதித்திட்டத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள். இதுதான் உண்மை!

கைதுஎப்படி?

      அஃப்சல்குருவை எப்படி கைது செய்தார்கள்? என்பதற்கு காவல் துறையினர் சொன்ன பதில், “அன்று நாடாளுமன்றத் தாக்குதலின் மூளை எனக் குற்றம் சாட்டப்பட்ட S.A.R. ஜீலானிதான் தகவல் தந்தார்என்றார்கள்.

  அதாவது ”S.A.R. ஜீலானியை கைது செய்தோம், அவர்தான் எங்களை அஃப்சல்குருவிடம் அழைத்துச் சென்றார்என்றார்கள்.     ஆனால் அஃப்சல்குருவை கைது செய்ய அனுப்பப்பட்ட கைது ஆவணங்கள், S.A.R.ஜீலானி கைது செய்யப்படுவதற்கு முன்பே அனுப்பப்பட்டு விட்டன என்பதை தெளிவுபடுத்தின.



 நீதிமன்றத்தின் பார்வைக்கு இவற்றைக் கொண்டு வந்தபோது, இதனை நீதிமன்றம் ”a Malicial Contradiction” அப்பட்டமான முரண்பாடு என்றது. (இந்த அடிப்படையில் வழக்கை அது தள்ளுபடி செய்திருக்கலாம். அப்பாவிகளைத் தூக்கில் போடுவதற்கு, நீதிமன்றங்களும் துணை நின்றதால், நீதிமன்றம் ஒரே சொல்லில் அதிருப்தியைத் தெரிவித்துவிட்டு விட்ட்து.) இது நீதிமன்ற அநீதி.

சிம்கார்டு:
            அஃப்சல்குருவுக்கு சிம்கார்டை விற்பனை செய்தவர் என்று ஒருவரை அழைத்து வந்தார்கள். அவரது பெயர் கமல் கிஷோர். அவர் அஃப்சல்குருவுக்கு ஒரு சிம்கார்டை  விற்றதாகவும், அது டிசம்பர் 4, 2001 அன்று விற்பனை செய்யப்பட்ட்தாகவும் கூறினார். இந்த சிம்கார்டு வழியாகத்தான் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட எல்லா தீவிரவாதிகளும் ஒன்றிணைக்கப்பட்டதாகக் கூறினார்கள்.

           ஆனால், நீதிமன்றத்தில் அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட (Call Records) கைப்பேசி பதிவுகள் ,இந்தசிம்கார்டுநவம்பர் 6, 2001-இல் இருந்தே செயல்பட தொடங்கி இருந்தது என்பதை உறுதிபடுத்தின. ”இது போன்ற போலி ஆவணங்கள், தயாரிக்கப்பட்ட சாட்சியங்கள், நீதிமன்றத்தில் தோலுரித்து காட்டப்பட்டன. ஆனால், நீதிமன்றங்கள் காவல்துறையை மிகவும் மிருதுவாக கண்டித்தன .பொய்யை சாட்சியமாக ஏற்றுக் கொண்டன.”
  
 













 

 

 

 

 

 

லேப்டாப்:

     அஃபசலிடமிருந்து இரண்டு முக்கிய தடயங்கள் அல்லது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் காட்டப்பட்டன. அவை 1) அவருடைய லேப்டாப், 2) அவருடைய செல்போன். இவற்றை கைப்பற்றியதாக எழுதப்பட்ட காதிதங்களில் கையெழுத்திட்ட சாட்சியங்கள், இரண்டு காவல் துறையினர்தாம். இவர்கள்தாம் அஃப்சல்குருவை நீண்ட நாட்கள் காவலில் வைத்திருந்தவர்கள், சித்திரவதை செய்தவர்கள், பணம் பறித்தவர்கள். (இந்த விவகாரத்தை நாம், வைகறை வெளிச்சம் ஜனவரி இதழில் வெளியிட்டிருந்தோம்.) முக்கிய ஆவணங்களை கைப்பற்றினால் அவற்றை சீல்வைத்துவிட வேண்டும். ஆனால் இவை எந்த நிலையிலும் சீல் வைக்கப்படவில்லை.

     இந்த லேப்டாப்-ஐ அவர்கள் திறந்தபோது அந்த லேப்டாப்பில், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்குத் தயாரிக்கப்பட்ட போலி நுழைவுச் சீட்டுகள், போலி அடையாள அட்டைகள் இவை மட்டுமே இருந்தன. இவை அல்லாமல் வேறேதுமில்லையா? என்று கேட்டதற்கு, காவல் துறையினர் கூறிய பதில், “இருந்தன, ஆனால் அவை அஃப்சல்குருவால் அழிக்கப்பட்டு விட்டன.” அதாவது, அஃப்சல்குரு தன்னை தூக்கில் போட்டிடத் தேவையான ஆவணங்களை மட்டுமே வைத்திருந்தார் மீதியை அழித்து விட்டார் எனக் கூறி இருந்தார்கள். எப்படி இருக்கிறது இவர்களின் நீதிபரிபாலனம்?

வழக்கறிஞர்:

     அஃப்சலுக்கு கீழ் நீதிமன்றங்களில், வழக்கறிஞர்களே வைக்கப்படவில்லை. உயர்நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வழக்கறிஞர், அஃப்சல்குருவை ஒரு முறை கூட சந்திக்கவில்லை.

இவற்றிற்கெல்லாம்மேலாக:

            நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சென்றவர்களுடன் அஃப்சல்குரு செல்லவில்லை. அப்படி குற்றப் பத்திரிக்கையும் கூட அவர் மீது குற்றம் சுமத்திடவில்லை.

     அவரால் யாரும் கொலை செய்யப்படவில்லை. ஆனாலும், அவர் தூக்கிலடப்படுகின்றார், சிலரைத் திருப்திப்படுத்திட.

உண்மை:

   கிடைக்கும் சாட்சியங்களை முறையானதோர் ஆய்வுக்கு உட்படுத்தினால் உண்மையிலேயே நாடாளுமன்றத் தாக்கிட திட்டமிட்டவர்கள், அதனை செயல்படுத்தியவர்கள் கண்டுபிடிக்கப் படுவார்கள். அவர்களையெல்லாம் காப்பற்றத்தான், அஃப்சல்குரு தூக்கிலிடப்பட்டுள்ளார்.

பழியும்பாவமும்:

     நாடாளுமன்றத்தைத் தாக்கிடவேண்டும், பழியை முஸ்லிம்கள் மீது, குறிப்பாக கஷ்மீர் முஸ்லிம்கள் மீது போட வேண்டும், முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டிட வேண்டும், என்பதற்காக அதனை திட்டமிட்டவர்களும் செயல்படுத்தியவர்களும் ‘STF’ என்ற கஷ்மீர் சிறப்புப் படையினரும் டெல்லி (Special Police Cell) தனிகாவல் துறையினரும்தான். இதனை விரிவாக வைகறைவெளிச்சம் ஜனவரி2013 இதழ், நாடாளுமன்றத் தாக்குதல் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் என்ற நூல் இவற்றில் குறிப்பிட்டிருந்தோம். 
                                                      -   MGM

தொடர்புடைய மற்ற ஆக்கங்கள்:
  


Sunday, 10 February 2013

நாடாளுமன்றத் தாக்குதல்: அருந்ததிராய் எழுப்பும் 13 கேள்விகள்



1) நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே காவல்துறையும் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஃபாசிச அரசாங்கமும் ஓர் அறிவிப்பை செய்து கொண்டே இருந்தன. அது, நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்பதே, 2001ம் ஆண்டு டிசம்பர் 12ம் நாள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் (Informal Meeting) நிச்சயமாக நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று அன்றைய பிரதமர் வாஜ்பேய் திட்டவட்டமாக ஓர் எச்சரிக்கையை விடுத்தார்.

டிசம்பர் 13ம் நாள் நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க பாதுகாப்புபடையினருக்குக் கடுமையான பயிற்சிகள் அளிக்கபட்டன. நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் சிறப்புக் காவல்கள் போடப்பட்டன. இந்நிலையில் வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது?

2)  நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் டெல்லியில் இயங்கும் சிறப்புக் காவல் படைப் பிரிவு இந்த நாடாளுமன்றத் தாக்குதல் லஷ்கர்--தொய்பா, ஜெய்ஷ்--முஹம்மத் போன்ற அமைப்புகளின் திட்டமிட்ட செயல் என்று அறிவித்தது. அத்தோடு இந்தத் தாக்குதல் முஹம்மது என்பவரல் தலைமையேற்று நடத்தப்பட்ட தாக்குதல் என்றது. இந்த முஹம்மது என்பவர்தான் 1998ல் இந்திய விமானம் ஐ..814ஐ கடத்தியவர் என்றும் அறிவித்தது. வழக்கு முடிந்த போது இவை எதுவுமே எந்த நீதிமன்றத்திலும் நிருபிக்கப்படவில்லை. இதுதான் உண்மைநிலை என்றால் இவர்களால் எப்படி நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் இது போன்ற அறிவிப்புகளை செய்ய முடிந்த்து? அப்படி அறிவிக்க இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது?


3)  நாடளுமன்றத் தாக்குதல் நடைபெற்றபோது அதனை முழுமையாக நாடளுமன்ற வளாகத்திலுள்ள கேமராக்களாலும் நாடளுமன்ற அரங்கிற்குள் இருந்த (Close Circuit TV- CCTV) க்ளோஸ் சர்க்யூட் டிவி என்ற சி.சி.டி.விகளாலும் பதியப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாடளுமன்ற உறுப்பினர் கபில்சிபால் இந்தத் தொலைக்காட்சிப் பதிவை நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு திரையிட்டுக் காட்டவேண்டும் என அன்று நாடளுமன்றத்தில் குரல் கொடுத்தார். அவரை அப்போதைய மேல்சபையின் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா ஆதரித்தார். நஜ்மா ஹெப்துல்லா அவர்கள் நாடளுமன்றத் தாக்குதல் குறித்த விளக்கங்களில் பல குழப்பங்கள் இருக்கின்றன என்றும் கூறினார். காங்கிரஸ் தலைமை கொறடாவான பிரியரஞ்சன்தாஸ் முன்ஷிஅவர்கள், “நாடளுமன்றத்தைத் தாக்க வந்த காரிலிருந்து 6 பேர் இறங்கிப் போவதை நான் பார்த்தேன், ஆனால் 5 பேர் மட்டுமே கொல்லப்பட்டார்கள். நாடளுமன்ற வளாகத்தின் தொலைக்காட்சிப் பதிவுகள் (CCTV) தெளிவாக 6 பேரைக் காட்டியது.” என்று கூறினார். பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி சொல்வது சரியானதுதான் என்றால் காவல்துறையினர் ஏன் ஐந்து பேர்கள்தான் காரில் வந்தனர் என சாதிக்கின்றனர்? அந்த ஆறாவது நபர் யார்? அவர் இப்போது எங்கே இருக்கின்றார்? அந்தத் தொலைக்காட்சிப் பதிவை ஏன் காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை? அதை ஏன் பொதுமக்களுக்கு காட்டவில்லை?

4)  இது போன்ற கேள்விகளை அப்போது நாடாளுமன்றத்தில் எல்லோரும் எழுப்பினார்கள். ஆனால் உடனேயே நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திப்போடப்பட்டது. அது ஏன்?

5)  நாடளுமன்றம் தாக்கப்பட்ட உடன் அப்போதைய அரசு நாடளுமன்றத் தாக்குதலில் பாகிஸ்தானின் கை இருக்கின்றது என்பதற்கு மறுக்கவியலாத சாட்சியங்கள் இருப்பதாக அறிவித்தது. அத்தோடு 50 லட்சம் படைவீரர்களை இந்தியா-பாகிஸ்தான் எல்லையை நோக்கிக் கொண்டு சென்றது. இந்தியத் திருநாடு ஓர் அணுஆயுதப் போரை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. அஃப்சல் என்பவரை சித்தரவதை செய்து வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைத் தவிர இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது? இந்த ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இவர்கள் தங்களிடம் இருப்பதாகச் சொன்ன அந்த மறுக்க முடியாத அத்தாட்சி என்ன?

6)  டிசம்பர் 13 அன்று நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு முன்பே பாகிஸ்தான் எல்லையை நோக்கி படைகளை நகர்த்தியதாக பல செய்திகள் கூறுகின்றன. இது உண்மையா? பொய்யா?

7)  நமது படைகளை போர் பீதியுடன் ஒரு வருடத்திற்கு பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தி வைத்திருந்தோம். இதற்கு நாம் செய்த வீண் செலவு எவ்வளவு? இதில் நமது இராணுவ வீரர்கள் எத்தனை பேர் மாண்டார்கள்? கன்னி வெடிகளை நாம் சரிவர கையாளாததால், இறந்த குடிமக்கள் எத்தனை பேர்? நமது இராணுவ வாகனங்கள் இடித்துத் தகர்ந்ததால் உயிரிழந்த கிராமவாசிகள் எத்தனை பேர்? கழனிகளில் கன்னி வெடிகளைப் புதைத்ததால் உயிரிழந்த நமது விவசாயிகள் எத்தனை பேர்?

8)  கிரிமினல் வழக்கு ஒன்றில் புலன் விசாரணை மேற்கொள்ளும்போது சம்பவம் நடந்த இடத்தில் கிடைக்கின்ற தகவல்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது எப்படி என்பதை நிருபிக்க வேண்டியது காவல்துறையின் கடமை, அவ்வாறு இருக்க காவல்துறையினர் முஹம்மது அஃப்சல் அவர்களைக் குற்றவாளி என எப்படிக் கண்டுபிடித்தனர்? காவல்துறையின் சிறப்புப்பிரிவு S.A.R.ஜீலானி என்பவர் மூலமாகத்தான் அஃப்சலைக் கண்டுபிடித்த்தாக கூறுகின்றது. ஆனால் அஃப்சலைக் கைது செய்வதற்கான அவரச செய்திகள் ஜீலானி அவர்களைக் கைது செய்வதற்கு முன்பே அனுப்பப்பட்டு விட்டன. அவ்வாறு இருக்க எப்படி காவல்துறையினர் அஃப்சலை நாடளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப் படுத்துகின்றனர்?

9)  காவல்துறையும், நீதிமன்றங்களும் அஃப்சலை நமது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த ஓர் போராளி என்றும் அவர் ஜம்மு கஷ்மீரின் STF (Special Task Force) சிறப்புக் காவல்படையினர் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் ஒத்துக் கொள்கின்றன. அப்படி இருக்க தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஒருவர் எப்படி நாடளுமன்றத்தையே தாக்குகின்ற பெரும் சதியில் ஈடுபட முடியும். இதற்கு சிறப்புக் காவல்படையினர் தரும் விளக்கம் என்ன?

10) லஷ்கர்--தொய்பா, ஜெய்ஷ்--முஹம்மத் போன்ற அமைப்புகள், கஷ்மீரின் சிறப்புக் காவல்படையினர் கீழ் இருந்த ஒருவரை அதிலும் குறிப்பாக சிறப்புக் காவல்படையினரால் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஒருவரை நம்பி நாடளுமன்றத் தாக்குதல் போன்ற பெரும் பணிகளில் இறங்குவார்களா?

11) தன்னுடைய வாக்குமூலத்தில் அஃப்சல் என்பவர் தனக்கு முஹம்மது என்பவரை அறிமுகப் படுத்தியவர் தாரீக் தான் என்று கூறியுள்ளார். இந்த தாரீக் என்பவர்தான் முஹம்மது என்பவரை டெல்லிக்கு அழைத்து வரும்படி கூறியதாகவும் கூறுகிறார். தாரீக் என்பவரின் பெயர் காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையிலும் இடம் பெற்றுள்ளது. இந்தத் தாரீக் என்பவர் யார்? அவர் இப்போது எங்கே இருக்கின்றார்

12) 2001 டிசம்பர் மாதம் 19ம் நாள், அதாவது நாடளுமன்றத்தாக்குதல் நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, மஹாராஷ்டிராவில் உள்ளதானேமாநகரக் காவல்துறை ஆணையர் எஸ்.எம். சங்காரி என்பவர் ஓர் அறிவிப்பைச் செய்தார். அந்த அறிவிப்பில், ”நாடாளுமன்றத் தாக்குதலின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முஹம்மது யாசீன் ஃபதா முஹம்மத் (என்ற அபூ ஹம்சா) என்பவர் லஷ்கர்--தொய்பாவைச் சார்ந்தவர். அவரை நான் மும்பையில் நவம்பர் 2000ல் கைது செய்தேன். கைது செய்தவுடன் அவரை ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளேன்.” என்று கூறினார். தன்னுடைய வாக்குமூலத்தை உறுதிப் படுத்தும் வகையிலான வலுவான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மஹாராஷ்டிரா காவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் சொல்வது உண்மையானால் ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட முஹம்மது யாசீன் எப்படி நாடளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும்?

காவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் கூறுவது பொய்யாக இருந்தால் முஹம்மது யாசீன் என்பவர் எங்கே இருக்கிறார்?

நாடளுமன்றத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேரும் யார் யார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லையே ஏன்?

13) இந்த வினாக்களை எழுப்பும் அருந்ததிராய், “இவற்றை ஆழமாக ஆராய்கின்றபோது நாடளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினரின் (குறிப்பாக ஜம்மு கஷ்மீரின் சிறப்புக் காவல்படை-யின்) கரங்கள், உதவிகள், ஈடுபாடுகள் ஆகியவை இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.” அத்தோடு இந்த செய்திகள் நமக்குள் அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்த வேண்டாம். அரசாங்கங்களும், புலனாய்வுத் துறைகளும் இது போன்றே யுக்திகளைக் கையாண்டு தங்களுடைய இலக்குகளை அடைந்து கொள்வது வரலாற்றில் நிரம்பவே நடந்திருக்கின்றது. 1933ல் ஜெர்மனியில் (Reichstag) ரீசஸ்டாக் என்பதை கொளுத்தித்தான் நாஜிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். அதேபோல்தான் ஐரோப்பாவின் உளவுத் துறையினர் இத்தாலியில் ரெட் பிரிகேட் என்ற போராளிக் குழுவை மக்கள் மன்றத்தில் தீவிரவாதிகளாகக் காட்டினார்கள். பின்னர் அழித்தார்கள். மேலே உள்ள கேள்விகளை அரசாங்கத்தை நோக்கிவிடுத்துவிட்டு அருந்ததிராய் கூறுகின்றார்:

          ”இதற்கு நம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பதிலெல்லாம் வெறும் மௌனம் மட்டும் தான்

 -M.G.M 

Saturday, 19 January 2013

பாபரி மஸ்ஜித்-இன் வழக்கும் மத்தியப்புலனாய்வுத்துறையின் மெத்தனப்போக்கும்


பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்டவுடன் அதனை உடனேயே கட்டித்தருவோம் என வாக்களித்தார் நாட்டு மக்களிடம் நரசிம்மராவ் என்ற அப்போதைய பிரதமர். இவர் இந்து தீவிரவாத அமைப்புகளின் பிறப்பிடமாகிய சித்பவன் என்னுமிடத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பின்னர் அந்த வாக்குறுதியைக் காற்றிலே பறக்கவிட்டார். அடுத்தாற்போல் அபார நாடகத்தை அரங்கேற்றினார். அந்த நாடகம் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின்னால் ஒரு சதி இருந்ததா? என்பதைக் கண்டுபிடிக்கப் போவதாகவும் அதற்காக மிகவும் ஆழமான விசாரணை ஒன்றை நடத்திட போவதாகவும் பிரகடனப் படுத்தினார்.
 
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நான்காவது நாள் ஒரு விசாரணைக்கு (16.12.1992 அன்று) உத்தரவிட்டார். ஒரு விசாரணை கமிஷனையும் நியமித்தார். இந்த விசாரணை கமிஷனின் தலைவராக லிபர்ஹான் என்ற உயர்நீதிமன்ற (ஓய்வு) நீதிபதியை நியமித்தார்.  
 
 இவர் கிடைத்த இந்தப் பதவியை 17 ஆண்டுகள் பயன்படுத்தி பலகோடி ரூபாயைச் சம்பளமாகப் பெற்றார். முடிவில் சங்பரிவாரங் களிடம் வாங்கிட வேண்டியதை வாங்கிவிட்டு “Conspiracy” என்ற சதி என்று பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின் இல்லை என்று கூறினார். ஆனால் முஸ்லிம்கள் சதி இருக்கிறது என்றும் அதில் அத்வானி உள்ளிட்டோர் உண்டு என்றும் வழக்குத் தொடர்ந்தார்கள். பின்னர் இந்த வழக்குகள் சிபிஐ என்ற மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
சதியைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்னாள் துணை பிரதமர் எல்.கே அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி, விஷ்வ ஹிந்து பரீஷத் அமைப்பைச் சார்ந்த பிரவின் தொகாடியா, சிவசேனை அமைப்பைச் சார்ந்த பால்தாக்கரே இன்னும் பலர். இதை எதிர்த்து அலஹாபாத் உயர்நீதிமன்றம் அப்படியொரு சதி இருக்கவில்லை எனக்கூறி சதி குறித்த குற்றச்சாட்டுகளை விட்டுவிட வேண்டும் எனக்கூறியது.
 
முஸ்லிம்கள் தொடர்ந்து தந்த நெருக்கடிகளால் சி.பி.ஐ இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் கொண்டு சென்றது. உச்ச நீதிமன்றத்தில் மத்தியப் புலனாய்வுத்துறை இப்படிக் கூறிற்று:
 
“அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபரி மஸ்ஜித் இடிப்பு சதி குற்றச்சாட்டை விட்டுவிட இயலாது. அதேபோல் இந்த வழக்கை நாம் ஏனைய வழக்குகளிலிருந்து பிரித்திடவும் இயலாது.”
 
ஏனைய வழக்குகள்: (ஏனைய வழக்குகள் என்பது, 1992இல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டவுடன் இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. ஒன்று 197/1992 பிறிதொன்று 198/1992. வழக்கு எண் 198/1992 என்பது பாபரி மஸ்ஜித் இடிப்பில் நேரடியாக தங்களை ஈடுபடுத்திய கரசேவகர்கள். மற்றொன்று சற்று தொலைவில் போடப்பட்ட மேடையில் நின்று உற்சாக உரைகளை நிகழ்த்தி பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு உறுதுணையாக நின்றவர்கள். இவர்கள் வழக்கு எண் 197/1992. இப்போது சிபிஐ சொல்வது இரண்டு வழக்குகளும் ஒன்று தான். எல்லோரும் இடித்தவர்களும் இடிக்க செய்தவர்களும் ஒன்று போலவே விசாரிக்கப்படவேண்டும் என்பதே) இது தான் நமது சட்டங்கள் சொல்லுபவையும்.
 
சி.பி.ஐ என்ற மத்திய புலனாய்வுத்துறை மேலும் கூறியது, வழக்கு எண் 197/1992 என்பதும் வழக்கு எண் 198/1992 என்பதும் வேறு வேறு என்று கூறுவது சரியல்ல. மத்திய புலனாய்வுத்துறை மேற்கொண்ட ஆய்வுகள் பாபரி மஸ்ஜித்-ஐ இடிக்க நடந்த சதி ஒரே பெரிய சதி, இடித்ததும் அந்த பெரிய சதியின் பிரிக்க முடியாத ஒரு பகுதிதான். இது குறித்து நாங்கள் 49 வழக்குகளை ஒரே வழக்காக பதிவு செய்திருக்கின்றோம். இதில் பாபரி மஸ்ஜித் இடிக்க வேண்டும் என்ற பெரிய சதியை நிறைவேற்றிட ஒவ்வொருவரும் ஆற்றிய பங்கினைக்குறிப்பிட்டுள்ளோம்.
 
இந்த வழக்குகள் பாபரி மஸ்ஜித் இடிப்பில் ஒவ்வொருவரும் ஆற்றிய பங்கினைத் தனித்தனியாகச் சாட்சி யங்களுடன் விரித்துரைக்கின்றன. வழக்கு எண் 198/1992 இல் பெயர் குறிப்பிடப் பட்டவர்கள் அங்கே போடப்பட்டிருந்த மேடையில் நின்றுக் கொண்டு குழுமி இருந்த கூட்டத்தை சட்டத்திற்குப் புறம்பாக வன்முறைகளில் ஈடுபடுத்தினார்கள். இதுதான் (பாபரி மஸ்ஜித்) அந்தக் கட்டடம், இடிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. அதனால் இவர்கள் தாம் முக்கிய குற்றவாளிகள்.
 
பள்ளிவாசலின் டூம் வீழ்ந்தவுடன் இவர்கள் தங்களுடைய கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள். அதோடு இனிப்புகளையும் வழங்கினார்கள். ஒருவரை ஒருவர் ஆறத் தழுவி அல்லோல கல்லோலப்பட்டார்கள். இவர்கள் மேடையில் நின்றுக் கொண்டு பேசிய பேச்சுகள் மத ஒற்றுமையைச் சீர்குலைத்தது. தேசிய ஒருமைப்பாட்டையும் பாதித்தது. அந்தக் கட்டடத்தை இடித்தது. அத்தோடு ஊடகத்தைச் சார்ந்தவர்களையும் தாக்கினார்கள். இத்தனையும் ஒரே குற்றந்தான். அவற்றை வெவ்வேறாகப் பிரித்திட இயலாது. இப்படி உச்ச நீதிமன்றத்தில் மத்தியப் புலனாய்வுத்துறை கூறியுள்ளது.
 
சிபிஐ -இன் தகிடுதத்தங்கள்: பாபரி மஸ்ஜித் இடிப்பில் சதி என்றொன்று இல்லை என்று அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துத் தான் இந்த மேல்முறையீட்டை சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதுது. இந்த வழக்கு டிசம்பர் 6 2012 அன்று நமது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய புலனாய்வுத்துறை சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிட வேண்டிய வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கே வந்திடவில்லை. அவர் சார்பில் ஒருவர் நீதிபதியிடம் ஆறு வாரத்திற்கு வழக்கை ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். நீதிபதிகளே மத்திய புலனாய்வுத்துறை இந்த வழக்கில் மிகவும் மெத்தனமாக இருப்பதாகக் கூறியுள்ளது. (செய்தி ஆதாரம் தி ஹிந்து 7.12.2012)
 
அதே போல் மத்திய புலனாய்வுத்துறை தன்னுடைய மேல் முறையீட்டில் இடிக்கப்பட்டது வெறும் கட்டடம் தான் என்பதாகவே  குறிப்பிடுகின்றது. கி.பி.1528இல் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கதொரு மஸ்ஜித் என்பது தான் பாபரி மஸ்ஜித்-இன் பெருமை. இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களுள் ஒன்று. ஆனால் இங்கே ஒரு வெற்றுக் கட்டடம் தான் என்பதாகவே காட்டப்படுகின்றது. இப்படித்தான் சிபிஐ இன் மனுவிலும் கூறப்பட்டுள்ளது.
 
இது மொத்த வழக்கும் பெற வேண்டிய மதிப்பையும் முக்கியத் துவத்தையும் குறைத்துக் காட்டுவதாகும். 20 ஆண்டுகளாகியும் மத்திய புலனாய்வுத்துறைக்கு இந்த வழக்கு முக்கிய வழக்காகத் தெரிந்திடவில்லை. இங்கே வழக்கை நடத்துவதைப் போல் ஒரு பாசாங்குக் காட்டினால் போதும் என்ற முடிவுக்கு மத்திய புலனாய்வுத்துறை ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகின்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகளே இந்த மெத்தனப்போக்கு குறித்து தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளார்கள்
 
பால்தாக்கரே: இவர் பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பெற்ற முக்கிய குற்றவாளிகளுள் ஒருவர். இவர் நீதிமன்றங்களை எட்டிப்பார்க்காமலேயே இறந்து போய் விட்டார். இப்படி குற்றஞ்சாட்டப்பட்ட வர்கள் தாமாகவே இறந்து போகும் வரைக்கும் வழக்குத் தொடரும். இதுவே இந்தியாவில் சிறுபான்மையினருக்கு கிடைக்கும் நீதி. 
 

பாபரி மஸ்ஜித் வழக்கின் இப்போதைய நிலை:வழக்கறிஞர் ஜாஃபர் ஜீலானியுடன் ஒரு பேட்டி:

வழக்குகளின் இப்போதைய நிலை:

 

 வழக்குக் குறித்த ஆவணங்களை அலஹாபாத் உயர்நீதி மன்றம் இன்னும் உச்சநீதி மன்றத்திற்கு அனுப்பவில்லை உச்ச நீதிமன்றம் அவற்றை கேட்கவில்லையா?
 
பலமுறை உச்ச நீதிமன்றம் கேட்டுவிட்டது. ஆனால் அலஹாபாத் நீதிமன்றம் அனுப்பவில்லை. காரணம் அவர்கள் இன்னும் சில அறிக்கைகள் தயாராக வேண்டியுள்ளது எனக் கூறுகின்றார்கள். எதெல்லாம் தயாராக இருக்கின்றனவோ அவற்றை அனுப்பி இருக்கலாம். ஆனால் அவற்றையும் அனுப்பவில்லை. நாங்கள் தலைமை நீதிபதியிடம் முறையிட்டிருக்கின்றோம்.
அத்வானி முதலானோர் மீதான சதி வழக்கு அது நடந்து கொண்டிருக்கின்றது. 24 12 2012 இல் வந்தது மீண்டும் 5 1 2013 ல் வரும்.
 

வெள்ளை அறிக்கை

திருவாளர் அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த நாட்களில் தீவிரவாதம் பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கப் போகின்றேன் என மிரட்டினார்.
எத்துணை விரைவாக அறிக்கை சமர்ப்பிக்கப் போகின்றீர்களோ அத்துணை நன்மைகள் விளையும் என்றார்கள் முஸ்லிம்கள். ஆனால் கடைசி வரைக்கும் மிரட்டலில் காலத்தை ஓட்டிவிட்டார்.
 
இந்தியன் முஜாஹித்தீன் என்றொரு அமைப்பு இருப்பதாக செய்திகள் வந்த போது முஸ்லிம்கள் அதை மறுத்தார்கள். ஆனால் உளவுத்துறையும் காவல் துறையினரும் எடுத்ததற்கெல்லாம் இப்படி ஒரு அமைப்பையே காரணம் காட்டிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்கள் மாநாடு போட்டு அதை எதிர்த்தார்கள்.
 
அந்த மாநாட்டில் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றினார்கள். அதில் இந்தியன் முஜாஹிதின் பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோரினார்கள்.
பார்க்க வைகறை வெளிச்சம்
 
ஆனால் அந்த வெள்ளை அறிக்கை வெளியே வரவே இல்லை. ஆதலால் முஸ்லிம்களே ஒரு வெள்ளை அறிக்கையைத் தயார் செய்கின்றார்கள்
அது குறித்து தகவல்களை கீழே இடம் பெறச் செய்கின்றோம்.
 

வெள்ளை அறிக்கை

 

முஸ்லிம்கள பீதியால் நடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். காரணம் இளைஞர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் தீவிரவாதி என முத்திரைக் குத்தப்படலாம். அந்த இளைஞர்களின் வாழ்க்கையும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையும் ஒட்டு மொத்தமாக நசுக்கப்படலாம்.
 
தீவிரவாதிகள் என்று பொய் வழக்குகளில் முஸ்லிம்களைச் சிக்க வைப்பவர்கள் அரசு இயந்திரம், மத்திய உளவுத்துறை ஐபி, காவல்துறை இவற்றுள் புகுந்துள்ள காவி சிந்தனையில் ஊறியக் கறுப்பாடுகள் தாம்.
இந்தக் கொடுமையை எதிர்த்து நாம் நீண்ட நாள்களாகப் போராடி வருகின்றோம்.
 
ஆனாலும் இந்தக் கருப்பாடுகள் தங்கள் கைவரிசையைத் தினம் தினம் காட்டி வருகின்றார்கள். இதனால் All India Muslim Mushawarath அகில இந்திய முஸ்லிம் முஷாவரா என்ற அமைப்பு ஒரு வெள்ளை அறிக்கையைத் தயாரித்து வருகின்றது.
 
சுமார் 600 முதல் 700 பக்கங்கள் வரை உள்ள ஒரு பெரிய அறிக்கையாக அஃது அமையும் (இன்ஷாஅல்லாஹ்) இதில் TADA தடா சட்டம், பொடா PODA என்ற சட்ட விரோதமாக குழுமுதல் தடை சட்டம் இடம் பெறும். இவற்றில் முஸ்லிம்கள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப் பட்டார்கள் என்பவையும் இடம் பெறும். அதேபோல் எதிர் தாக்குதல் (என்கவுன்டர்) என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களை கொலை செய்வது பற்றிய ஆய்வும் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்.
 
இன்னும் ஒரு படி மேலே போய் மத்திய உளவுத்துறை, காவல்துறை, ஊடகங்களின் மாச்சர்யம், சிமி என்ற இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம், இந்தியன் முஜாஹிதீன் என்ற காட்டுக்கதைகள் இவை பற்றிய நேர்மையான ஆய்வு ஒன்றும் இடம் பெறும் இன்ஷாஅல்லாஹ்.
 
அதேபோல் ஆஸம் கார்க் பட்கல், மாலேகான் ,டார்பங்கா போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமைகளும் கணக்கில் கொண்டுவரப்படும். இதனை டெல்லியிலிருந்து வெளிவரும் மில்லிகெஜட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம்கான் அவர்கள்தாம் செய்கின்றார்கள். டாக்டர் ஜபருல் இஸ்லாம்கான் தான் மஜ்லிசே முஷாவரத் என்ற அமைப்பின் தலைவருமாவார். இந்த அமைப்பின் சார்பில் தான் இஃது வெளியிடப்படவுள்ளது.
 
இதற்கு உதவியாக வாசகர்கள் தங்கள் கைவசமுள்ள தகவல்களை அனுப்பிக் கொடுக்கலாம். இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட ரூபாய் 25 லட்சம் ஆகும். இதற்காக நன்கொடைகள் வழங்கிட விரும்புவோர் இதர விபரங்களுக்குத் தொடர்புகொள்ள விரும்புவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
 
All India Muslim Majlis-E-Mushawarath, D.250 Abul Fazal Enclave, Part 1, Jamia Nagar, New Delhi- 110025.

அளவை மிஞ்சிய அநீதி மதானியின் பார்வையைப் பறித்து விட்டார்கள்...

பெங்களூர் சிறையில் அடைப்பட்டு கிடக்கின்றார் நாசர் மதானி அவர்கள். K.P..சசி திரைப்பட தயாரிப்பாளர் அரசியல் விற்பன்னர். அண்மையில் அவர் எழுதி, பல பத்திரிக்கைளிலும் வெளிவந்த செய்தி அறிக்கை ஒன்று அனைவரின் கண்களையும் கலக்கிற்று. அதனை இங்கே தருகின்றோம்.

  “நான் அப்துல் நாசர் மதானி அவர்களை பெங்களூர் சிறையில் சந்தித்தேன். அவர் பெங்களூர் குண்டு வெடிப்புஎன்று அழைக்கப்படும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய கண்களின் அமைதி என் இதயத்தில் பேரிடியாய் வீழ்ந்தது. அவருடைய கண்கள் பார்வையை வேகமாக இழந்து வருகின்றன. காரணம் போதிய அளவு மருத்துவம் அவருக்குக் கிடைக்கவில்லை

      நான் பல முறை அவரை சந்தித்திருக்கின்றேன். அவரது கண்களின் கதை எனக்குத்தெரியும். என்னைப் பொறுத்தவரை அவருடைய கண்கள் இஸ்லாமிய அபாயம் என்பதற்கும் மத சார்பின்மை கேரளாவில் எப்படிக் கடைப்பிடிக்கப் படுகின்றது என்பதற்கும் அத்தாட்சிகள்.

      என்னால் அவருக்குச் சொல்ல முடிந்த ஆறுதல் எல்லாம் என்னைப் போன்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யமுடியும்? இந்த கேள்விக்கு நான் மட்டுந்தான் இந்த கதிக்கு ஆளாகி இருக்கின்றேன் என எண்ணாதீர்கள். ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்பெற்று சிறையில் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருக்கின்றார்கள். சில நேரங்களில் எனக்கு சிதறிய சிறிய ஆதரவுகள் அவ்வப்போது கிடைத்து விடுகின்றது.

     இதற்கோர் எடுத்துக்காட்டையும் எங்கள் கண்களின் முன்னாலேயே காட்டினார்கள். ஆமாம் அவருடைய தள்ளும் நாற்காலியைத் தள்ளிச் சென்று உதவிசெய்யும் ஒருவர் மூலம் ஜக்கரிய்யா என்பவரை எங்களுக்குக் காண்பித்தார். இந்த ஜக்கரிய்யா 21 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றான். இந்த ஜக்கரிய்யாவின் கதை இந்தியாவின் நீதித்துறையின் மிகவும் கேவலமான அத்தியாயம். அவனுக்கு ஏன் அவன் சிறையில் இருக்கின்றான் என்பது தெரியாது. சிறையில் தொடர்ந்து நடக்கும் கொடுமைகளால் அவன் உடலாலும் உள்ளத்தாலும் சிதைந்து போனான்.

     அதேபோல் மதானியின் தள்ளும் நாற்காலியைத் தள்ளிச் செல்பவன், ஏற்கனவே நடமாடும் பிணமாக ஆகிப் போனான். அவனுக்கும் போதிய மருந்து கிடைக்காததே காரணம் என நான் கேள்விப்பட்டேன். தொடர்ந்து கேரளாவிலுள்ளவர்கள் ஒரு வேளை அவருடைய மரணத்திற்காகக் காத்திருக்கின்றார் களோ என எண்ணிடத் தோன்றுகின்றது. அவர் இறந்தவுடன் அவர்கள் அவரை ஒரு பெரும் தியாகியாகக் காட்டி தங்கள் அரசியல் ஆட்டத்தை ஆடிடத் தொடங்கி விடுவார்கள்.

   கோவை சிறையில் மதானியை 9 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து சிறையில் வைத்த பின்பே அப்பாவி எனக் கண்டு பிடித்தார்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சிகள் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்ளும் ஊடகங்கள் இவைதாம் மதானி மீது கற்பனை வழக்குகளைப் புனைவதற்குக் காரணம்.

   நாமெல்லாம் ஜாண்லிலோன் என்பவரின் பாட்டு ஒன்றை மீண்டும் மீண்டும் பாடுவோம். அதிசயதக்க அளவில் மதானியும் நான் மட்டுமல்ல என்பதைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றார். அன்பார்ந்த வாசகர்களே! நம்புங்கள் நாசர் மதானியின் மேல் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் பொய். புனையப்பட்டவை. ஆனால் அவர் சிறை, சித்திரவதை இவற்றாலேயே தான் இப்போது கண்களையும் சில காலம் கழித்து தன் உயிரையும் இழக்கப்போகிறார்.

    கர்நாடகாவில் சிறைகளில் பல முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். ஆனால் இன்றளவும் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள்? ஏன் சிறையிலடைக் கப்பட்டார்கள் என்பது அவர்களுக்கும் சொல்லப்படவில்லை. உலகுக்கும் தெரியாது. ஏன் அவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதிகளுக்கும் தெரியாது. காவல் துறையினர் கொண்டு வந்தார்கள். இவர் மீது சந்தேகம் இருக்கின்றது என்றார்கள். நீதிபதிகள் சிறையிலடைத்தார்கள்.

  சங்க பரிவாரத்தவர்கள் அவரது கால்களை குண்டுவீசி கொய்தார்கள்.அரசு பரிவாரம் அவரது கண்களைப் பறித்தது காலப்போக்கில் உயிரையும் பறிப்பார்கள். காரணம் அவர் குற்றமற்றவர். ஆனால் முஸ்லிம். மதானிகள் ஜக்கரியாக்கள் இவர்களுக்கு வாழ்க்கை மரணத்திற்குப் பின்வரும் மறுமையில் தாம் வாழ்க்கை. அவர்களும் பூமிக்கு மேல் இருப்பதை விட பூமிக்கு கீழிருப்பதையே நாடுகின்றார்கள்.

    அல்லாஹ் பிரகடனப் படுத்துகின்றான் உங்களையுடைய வானத்தின் மீது சத்தியமாக மேலும் சாட்சிகள் மீதும் சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக நெருப்புக்குண்டங்களை உடையவர்கள் கொல்லப்பட்டனர்.
விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக்குண்டம் அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது அல்லாஹ்வை நம்பி நின்ற மூமின்களை அவர்கள் நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை செய்தார்கள். அதற்கு அவர்களே சாட்சியாக இருந்தார்கள்.


    அனைத்தையும் மிகைத்தவனும் புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கிடவில்லை. வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் சாட்சியாக இருக்கின்றான். நிச்சயமாக எவர்கள் முஃமினான ஆண்களையும் முஃமினான பெண்களையும் துன்புறுத்திய பின்னர் தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு (அல்குர்ஆன் 85:1-10)

       அல்லாஹ்விடமிருந்தே வந்தோம் அவனிடமே திரும்புவோம். நாசர் மதானி அவர்களுக்கு இதைவிட பெரிய நம்பிக்கையும் ஆறுதலும் வேறுஇல்லை!
                                           -எம்.ஜி.எம்